942. எறிவெம் படையா லிவர்வீழ்ந் தெழலா
லுறுவெந் துயரல் லதுடம் புவிடார்
கறுவா திகடும் பரிணா மமிடை
யெறியா வகையா யுவையாற் றலினே.
(இ-ள்.) எறி - சரீரங்களை வெட்டும்படியான, வெம் - வெப்பம்
பொருந்திய, படையால் - (அந்நரக பூமியிலிரா நின்ற)
ஆயுதங்களினால், (சரீரம் வெட்டுண்டு), இவர் வீழ்ந்தெழலால் - இந்
நாரகர்கள் இடைவிடாமல் எழும்பி விழுதலால், உறும் -
அடையப்பட்ட, வெம் - வெப்பம் பொருந்திய, துயரல்லது -
துக்கங்களே யல்லாமல், கறுவாதி - குரோதம் முதலாகிய,
கடும்பரிணாமம் - அசுபலேசியா பரிணாமமானது, இடை யெறியாவகை
- நடுவில் சேதிப்பதற்குக் கூடாத விதமாய், ஆயுவை -
தங்களுக்குண்டாகிய ஆயுஷ்ய ஸ்திதியை, ஆற்றலின் - உண்டு
பண்ணுகிறதால், உடம்புவிடார் - சரீரத்தினீங்கார், (அதாவது :
அபமிருத்யாயுஷ்யமில்லாதவர்க ளாவார்கள்), எ-று. (13)
943. வினையே துயரத் தைவிளைப் பதலால்
நினைவார் செயல்மற் றிலைநீ டுயிரை
முனைமூட் டுவர்கீ ழுளதே வரிவன்
உனைமுன் னினசெய் தனனென் றுரையா.
(இ-ள்.) உயிரை - அப்படிப்பட்ட நரகத்திலடைபவர்களின்
உயிரை, நீடு - பெரிதாகிய, வினையே - (அவ்வவ்வுயிர்கள் முன்
செய்த பாவகர்மத்தினாலாகிய) திரவிய பாபகர்மங்களே, துயரத்தை -
துன்பத்தை, விளைப்பதலால் - (உதயமாகித்) துன்பஞ் செய்வதல்லது,
நினைவார் செயல் - இப்படித் துன்பமுறு கின்றவர்களை நினைத்து
அத்துன்பந்தீர பிரதிகாரக் கிரியைகளால் செய்யப்படுங் காரியங்கள்,
இல்லை - அந்நரகத்தில் கிடையாது, (ஆனாலும்), கீழுள தேவர் -
பவண தேவர்களானவர்கள், (அந்நரகத்தில் போய் நாரகர்களைப்
பார்த்து ஒவ்வொருவரையும் தனித்தனியாக, இவன் -
இந்நாரகனானவன், உனை - உனக்கு, முன் - முன் சன்மத்திலே, இன
செய்தனன் - பொல்லாங்குகளைச் செய்தான், என்று - என்று, உரையா
- கலகஞ் சொல்லி, முனை மூட்டுவர் - ஒருவர்கொருவர் சண்டையை
உண்டு பண்ணுவார்கள், எ-று.
இப்படித் துன்பம் அதிகமாவதே ஒழிய விலகுந்தன்மை
ஆயுஷ்யமுள்ளவரையில் நரகர்க்கு அரிதென்பது ஒரு வகையாலாகிய
தென்பது இதன் தாத்பரியம். இனாசெய்தான் என்பது
இனாசெய்தானென்று வந்தது. உனை - உருபுமயக்கம். (14)
944. கணமும் மிடையின் றியெழும் பசியா
லுணவென் றெனவந் துலகத் துளநஞ் |