| 
           சினையில் லெனகாய்ந் தவிரும் பினைநீ 
            ரணையும் படியா லணையா வடுமே.	 
           (இ-ள்.)    கணமும்  - (அந்நாரகர்களுக்கு)   ஒரு  நிமிஷமும், 
        இடையின்றி   -    இடை விடாமல், எழும் - உண்டாகிய, பசியால் - 
        பசியினால்,  உணவென்றென - அன்னம்  எப்பொழுதுகிடைக்குமென்று 
        நினைத்த  வளவில், உலகத்துள - அந்நரக லோகத்திலுள்ள, நஞ்சு - 
        விஷ   ஸ்கந்தங்களெல்லாம்,   வந்து    -  அவர்களிடத்தில் வந்து, 
        இணையில்லென - இதற்கு நிகரில்லை யென்று சொல்லும்படி, காய்ந்த 
        -   கருமான்   உலையில் வெந்த, இரும்பினை - இரும்பினை, நீர் - 
        ஜலமானது,   அணையும்   படியால் - சேர்ந்து ஏகமயமாவது போல், 
        அணையா   - சரீரத்திற் செறிந்து, அடும் - துன்பஞ் செய்யா நிற்கும், 
        எ-று.							                                                 (15) 
      வேறு.	 
      945.	மேருநே ரிருப்பு வட்டை யிட்டவக் கணத்தி னுள்ளே 
            நீரென வுருக்குஞ் சீத வெப்பங்க ணின்ற கீழ்மே 
            லார்வமி லறிவன் றந்த நூலினைந் தாவ தன்னிற் 
            கார்முகில் வண்ண சீத வெப்பங்க ணின்ற கண்டாய்.	 
           (இ-ள்.)  கார்முகில்  வண்ண - கரிய மேகம்போன்ற நிறமுடைய 
        நாரகனே!,     மேருநேர்  - மஹாமேரு பர்வதத்திற்குச் சமானமாகிய, 
        இருப்பு   வட்டை   -   இரும்புக்குண்டை, இட்டவக்கணத்தினுள்ளே 
        அந்நரக   பூமியில்  இட்டஸமயத்திலே, நீரென - அது ஜலமாகும்படி, 
        உருக்கும் - உருக்கும்படியான, சீதம் - சீதாவாஸங்களும், வெப்பங்கள் 
        - உஷ்ணாவாஸங்களும்,   கீழ்மேல் - கீழ் மேலாக (அதாவது : கீழில் 
        சீதாவஸங்களும்   மேல்  நரகங்களில் உஷ்ணாவாஸங்களும்), நின்ற - 
        நிலைபெற்றிருக்கின்றன,   ஆர்வமில்  - ராகமில்லாத (வீதராகனாகிய), 
        அறிவன் - கேவல ஞானத்தையுடைய ஸர்வஜ்ஞன், தந்த - தெரிவித்த, 
        நூலின்  - பரமாகமத்திலே,   (கூறியபடி)    ஐந்தாவதன்னில் - ஐந்தா 
        நரத்திலே,   சீதவெப்பங்கள்   -  சீதாவாஸங்கள் உஷ்ணாவாஸங்கள் 
        இரண்டும், நின்ற - நிலைபெற்றிருக்கின்றன, எ-று.	 
           ஐந்தாநரகத்திலே  மேலே  மூன்று   புரையிலும் அதற்கு மேல், 
        நாலு,  மூன்று,  இரண்டு, ஒன்றுமாகிய நரகங்களில் உஷ்ணாவாஸமும், 
        அந்த    ஐந்தாவது  நரகத்திலே   கீழ்   இரண்டு புரையிலும், ஆறா 
        நரகத்திலும், ஏழாவது நரகத்திலும் சீதாவாஸங்களுமாகும்.	 
           கண்டாய் - அசை.								                                 (16)	 
      946.	வேண்டிய வதற்கு மாறா விகுவணை யெட்டு மெய்யின் 
          மாண்பில தோன்று நம்மை மாறுமுன் செய்ய வந்தங்  |