446மேருமந்தர புராணம்  


 

    முறுகவெந் துருகுஞ் செப்புப் பாவையை முயங்க மூர்ச்சித்
    தறிவழிந் தலம்வந் தாற்றா தரற்றுகின் றார்க ளையா.

     (இ-ள்.)   ஐயா  -  முன்   விபீஷணனாகியிருந்த  ஐயனாகிய
நாரகனே!,   அறம்     - தர்மமும், அறிவு - ஞானமும், அடக்கம் -
ஸம்யமமும், ஆண்மை - புருஷத்துவமும், (அதாவது : பௌருஷமும்),
குடிப்பிறப்பு  - நற்குடிப்பிறப்பும், (ஆகிய இவைகளெல்லாம்), அழிய -
நாசம்     அடையும்படி,   அன்பில்   -    மோஹனீயோதய ஜனித
அப்பிரசஸ்தராக   பரிணதியினால்,   பிறர்மனை நலத்தில் - அன்னிய
ஸ்த்ரீகளுடைய    காம அனுபோகத்தில், சேர்ந்தார் - சேர்ந்தவர்கள்,
பேர்    - பெரிதாகிய, அழற்குட்டந் தன்னில் - அக்னி ஸமூஹத்தின்
குழியில்,    முறுக    -    உஷ்ணம்  மிக ஏறும்படியாக, வெந்து -
வேகப்பட்டதாகி,    உருகும் - உருகும்படியான நிலைமையையுடைய,
செப்புப்பாவையை - செம்பாலாகிய பொம்மையை, முயங்க - சேர்ந்து
தழுவி,  மூர்ச்சித்து   -  மயக்கமடைந்து, அறிவழிந்து - புத்திகெட்டு,
அலம்   வந்து    - வருத்தமுற்று, ஆற்றாது - பொறுக்க முடியாமல்,
அரற்றுகின்றார்கள் - சோகஸ்வரத்தால்    கூக்குரலிட்டு       அழா
நின்றார்கள், எ-று.                                       (19)

949. ஊன்சுவைத் துறுதி யோரா ருள்ளத்திற் கொடிய ராகிக்
    கூன்சிலைக் கணையோ டேந்திக் கொலைத்தொழில் புரிந்து
                                        வந்தார்
    தான்செல விட்ட நாய்போற் கடியநாய் கவர வஞ்சி
    வான்சினை யிலவ மேற்றி வந்துவீழ்ந் தரற்று கின்றார்.

    (இ-ள்.)   உறுதியோரார்    -     உறுதியாகிய     தர்மத்தை
அறியாதவர்களாகி,     உள்ளத்தில்    -    மனதில், கொடியராகி -
பொல்லாங்கினை யுடையவர்களாகி, கூன் - வளைந்திராநின்ற, சிலை -
வில்லை,    கணையோடு   -   அம்புகளுடன்,    ஏந்தி  - தரித்து,
கொலைத்தொழில்   -  ஜீவஹிம்ஸைத் தொழிலிலே, புரிந்து - மிகவும்
விரும்பி (அதாவது :  ஹிம்ஸானந்த தத்பரர்களாய்), ஊன் சுவைத்து -
மாம்ஸ    போஜிகளாகி,    வந்தார்   -  வந்தவர்கள், செலவிட்ட -
(பூர்வஜென்மத்தில்  வேட்டையாடத்   தொடங்கிப் பிராணிகள் பேரில்
கடிக்கும்படி)   ஏவப்பட்ட, நாய்போல் - நாய்களைப் போல், (புராதன
நாரகர்கள்  கூட்டமாகிய), கடிய - பொல்லாங்காகிய, நாய் - நாய்கள்,
கவர   - (தங்களைக்) கடிக்க, அஞ்சி - பயந்து, வான் - பெரிதாகிய,
சினை  -   கிளைகளையுடைய,   இலவம் - முள்ளிலவமரத்தில், (சில
நாரகர்  கூடி), ஏற்றி - ஏறச்செய்து, (மறுபடியும் அங்கு நின்றும் கீழே
விழும்படி அடித்தலால்), வந்து வீழ்ந்து - நரக பூமியில் வந்து வீழ்ந்து,
அரற்றுகின்றார் - அழுகின்றார்கள், எ-று.

     தான் - அசை.                                     (20)

950. மனையறம் மறந்து மன்றி னின்றுவான் குடிக ணையத்
    தனம்வலி யதனின் வாங்கிச் சாலவுந் தளர்வு செய்தார்