நிரையத்துளறவுரைச்சருக்கம் 447


 

    நுனைமுடி விலாத முள்ளின் மத்திகைப் புடையி னுங்கி
    நினைவருந் துயரந் துய்த்து நெடிதுயிர்ப் பார்க ளையா.

     (இ-ள்.)  ஐயா  - ஐயனாகிய நாரகனே!, மனையறம் - இல்லறம்
என்னும்    தர்மத்தை,  மறந்து - தெரியாமல் மயங்கி, மன்றினின்று -
சபையிலே  நீதிநாயக   ஸ்தானம் வகித்து நின்று, வான் - பெரிதாகிய
(அதாவது :  பாரம்பரியமாக   வரா நின்ற), குடிகள் - ஜனசமூகங்கள்,
நைய   - வருந்தும்படி, தனம் - அவர்கள் சம்பாதித்த திரவியங்களை,
வலியதனின்   - (நியாய   விரோதமாக) வல்லமையினாலே, வாங்கி -
வாங்கிக்கொண்டு,   சாலவும்   -   மிகவும்,   தளர்வு    செய்தார் -
சனங்களுக்கு       வருத்தத்தைச்      செய்தவர்கள்,    (அப்பாவ
வினையினுதயத்தால்    நரகத்திற்செனிக்க,  அவர்களைப்    புராதன
நாரகர்கள்  கூடிக்கொண்டு அடிக்கும்), நுனை  - கூர்மை பொருந்திய,
முடிவில்லாத    கணக்கில்லாத,     முள்ளின்  -  முட்களையுடைய,
மத்திகைப்புடையின்   -   சம்மட்டியடிகளினால்,   நுங்கி  -  சரீரம்
நொறுங்கி,   நினைவரும்   - எண்ணற்கரிய, துயரம் - கஷ்டங்களை,
துய்த்து    -  அநுபவித்து, நெடி துயிர்ப்பார்கள் - பெருமூச்செறிந்து
நிற்பார்கள், எ-று.                                       (21)

வேறு.

951. வலையிலுயிர் வாரியதன் மாறுவிலை கொண்டார்
    நிலையகழு வேறிநிணம் வந்தொழுக நின்றார்
    விலையின்முடை கொண்டுணலை மேவினர்கள் கண்டாய்
    நிலையில்பெருஞ் சீக்குழியி னின்றுசுழல் கின்றார்.

     (இ-ள்.) வலையில் - வலை முதலாகிய கருவிகளினால், உயிர் -
மஸ்யாதி ஜீவ சமூகங்கள், வாரி - கொலை செய்து வாரி, அதன்மாறு -
அதற்குப்  பிரதியாக,  விலை - கிரயத்தை (அதாவது : பெறுமானமாக
இதர   வஸ்துக்களான    தன  தான் யாதிவகைகளை), கொண்டார் -
பெற்றவர்கள், (நரகத்திற் செனித்து),    நிலைய - அந்நரகத்தில் நிலை
பெற்றிராநின்ற, கழு -கழுமரத்தில் ஏறி - புராதன நாரகர்கள் ஏறும்படி
செய்ய  ஏறி,  நிணம் - சரீரத்தினின்றும் இரத்த மாம்ஸாதி நிணங்கள்,
வந்து    -  வெளியாகி    வந்து,    ஒழுக   -  உதிர,  நின்றார் -
இரணவேதனையில்    நின்றவர்களாவர்கள்,   விலையின்    முடை -
விற்கப்பட்ட   மாமிசத்தை,  கொண்டு - விலைக்கு வாங்கிக்கொண்டு,
உணலை    - உண்பதை,   மேவினர்கள்   - பொருந்தினவர்களாகிய
மாமிசபோஜிகள், நிலையில் - நீச்சு நிலையின்றி ஆழமாகிய, பெரும் -
விசாலமாகிய,  சீக்குழியுள் - சீயினால் நிறைந்த பெருங்குழியில், நின்று
- தங்கி நின்று, சுழல்கின்றார் - சுழன்று வருந்துகின்றவர்களாவார்கள்,
எ-று.                                                  (22)

952. இல்லையுயிர் நல்வினை யிறந்தவர் பிறப்பெனச்
    சொல்லினவர் செம்புருக்கி வாயிற்பெய் துயிர்வார்