448மேருமந்தர புராணம்  


 

    கல்வியொடு புணர்ந்துகடை நல்லொழுக்க மென்பா
    ரெல்லையில வெந்துயர மெய்தியுழல் கின்றார்.

     (இ-ள்.)   உயிர்   -  ஜீவன்களும்,   நல்வினை  - புண்ணிய
கர்மாதிகளும்,   இறந்தவர் -  மரணமடைந்தவர்கள், பிறப்பு - மறுபடி
பிறத்தலும்,   (ஆகிய    இவைகள்), இல்லையெனச் சொல்லினவர் -
இல்லையென்று   (நாஸ்திகமே    பிரமாணமென்று   அர்த்த அயதா
கிரஹ்ணமாகிய,   முஹ்ய  புத்தியினால்) சொல்லுபவர்கள், (நரகத்திற்
சென்மித்துப்   புராதன நாரகர்களால்), செம்பு - செம்பை, உருக்கி -
உருக்கி, வாயிற் பெய்து - வாயிலூற்ற, (சகிக்க முடியாத துன்பமுற்று),
உயிர்வார்    - பெருமூச்சு   விடுவார்கள்,  கல்வியொடு புணர்ந்து -
வித்தையோடு    சேர்ந்து   (அதாவது :   படித்திருந்தும்     யுக்தி
குறைவினால்),    நல்லொழுக்கம்   - ஸம்மியக்    சாரித்திரமானது,
கடையென்பார்   - தாழ்ந்த    நிலையென்று      சொல்லுபவர்கள்,
(நரகத்திற்செனித்து), எல்லையில் - மட்டுமித மில்லாததாகிய, வெம் -
வெப்பம்   பொருந்திய,   துயரம் - துன்பங்களை, எய்தி -அடைந்து,
சுழல்கின்றார் - சுழலாநின்றார்கள், எ-று.                     (23)

953. பொய்யுரை புனைந்துபொருள் வாங்கினர்கள் கண்டாய்
    கையுகிரி னூசியவை காய்ந்தசெறிப் புண்பார்
    வையம்புகழ் மாதவரை வைதனர்கள் காரி
    னெய்யுருக்கி வாயிற்பெய நின்றுசுழல் கின்றார்.

     (இ-ள்.)   பொய்யுரை  -   அஸத்திய வசனத்தை, புனைந்து -
அலங்காரமாக ஸ்தாபிதஞ் செய்து சொல்லி, பொருள் வாங்கினர்கள் -
அன்னியர்களின் திரவியத்தை  வாங்கினவர்கள், (நரகத்திற் செனித்து),
கையுகிரின் -அவர்கள் கை நகங்களில், காய்ந்த - அக்னியில் நன்றாக
வேகப்பட்ட,   ஊசியவை   -   இருப்பூசிகளினால், செறிப்புண்பார் -
(புராதன நாரகர்களினால்) சொருகப்பெற்றலறுபவராவார்கள், வையம் -
இந்த லோகத்திலே  பவ்வியர்களினால்,  புகழ் - ஸ்துதிக்கும்படியான,
(ஸம்மியக்ஞானாதி        குணங்களையுடையராகிய),    மாதவரை -
உத்கிருஷ்டமாகிய    தபசைச்     சேர்ந்த    மஹா முனிவரர்களை,
வைதனர்கள்   -   நிந்தித்தவர்கள், (நரகத்திற்   பிறக்க அவர்களைப்
புராதன  நாரகர்கள்),காரி  -  விஷத்தையும், நெய்  - இரத்தத்தையும்,
உருக்கி   - சேர்த்துக் காய்ச்சி, வாயில் - அவர்கள் வாயிலே, பெய -
ஊற்ற,  நின்று   -   அந்நரகத்தில்    நின்று, சுழல்கின்றார் - சுழலா
நின்றார்கள், எ-று.                                       (24)

954. ஒழுக்கினை யழித்துட னழுக்குணர் வுரைத்தார்
    புழுக்கணலி யப்புடை புடைத்துவிழு கின்றார்
    வழுக்கினவர் நன்னெறியின் மத்திகை யெடுத்து
    விழுப்பற வதுக்கவினை யேகொடிய தென்பார்.