நிரையத்துளறவுரைச்சருக்கம் 449


 

     (இ-ள்.)  ஒழுக்கினை  -  ஸம்மியக் சாரித்திரத்தை, அழித்து -
கெடுத்து,   உடன்   - உடனே, அழுக்குணர்வு - கெட்ட செயலுக்கு
ஏதுவாகிய, குமதி, குஸ்ரீதிஜ்ஞானங்களை, உரைத்தார் - (கர்மானுகுண
உதயத்தால்)   சொன்னவர்கள், (நரகத்திற்றோன்றி), புழுக்கள் நலிய -
(அவர்களது   சரீரத்தில்)   கிருமிகள்  ஸஞ்ஜாதங்களாகி உபத்திரவம்
செய்ய,    (தாளாமல்),    புடை    புடைத்து  -   விலாப்பக்கத்தில்
அடித்துக்கொண்டு,     விழுகின்றார்   -    பூமியில் விழுந்து புரளா
நின்றார்கள்,    நன்னெறியின்  - நன்மார்க்கமான செயல்களினின்றும்,
வழுக்கினவர்  - நழுவினவர்களாகித் துச்சாரித்திரத்தில் சென்றவர்கள்,
(நரகத்திற்றோன்றிப்   புராதன   நாரகர்களால்), மத்திகை யெடுத்து -
சம்மட்டிகளைத்   தூக்கி, விழுப்பு - முன் செய்த துர்ச்சாரித்திரமாகிய
அனாச்சாரம்,     அற   -   நீங்கும்படி, அதுக்க - (புராதன நாரகர்
தங்களை)அடிக்க,    வினையே    - நமது    கர்மமே, கொடியது -
பொல்லாங்கினையுடையது,    என்பார்  -   என்று   சொல்வார்கள்,
எ-று.                                                 (25)

955. மிக்கவெகு ளிக்கனலி யிட்டுநகர் சுட்டார்
    செக்குர லிடைப்பல திலத்தினெரி கின்றார்
    சக்கர மடைந்தபின் னறத்தினை மறந்தா
    ரெக்கதுணை மிக்கதுய ரத்திடை யுழைப்பார்.

     (இ-ள்.)  மிக்க  -  மிகுதியாகிய, வெகுளி - குரோதத்தினாலே,
கனலியிட்டு      -       நெருப்பை  வைத்து, நகர் - ஊர்பட்டணம்
முதலியவைகளை,    சுட்டார் - கொளுத்தினவர்கள், செக்குரலிடை -
(நரகத்தில்    பிறந்து    அங்குள்ள) கற்காணத்தில், பல திலத்தின் -
அனேகமாகிய   எள்ளுகளைப்போல,   (புராதன நாரகர்கள் தங்களை
இட்டுச்சுற்ற),  நெரிகின்றார்  - சரீரம் நொறுங்கித் துன்புறுகின்றார்கள்,
சக்கரமடைந்த பின் - அரசுக்குரிய ஆக்ஞாசக்கரத்தை யடைந்து மிக்க
ஐசுவரியம்     பெற்ற   பிறகு,  அறத்தினை - தர்மத்தை, மறந்தார் -
மறந்தவர்கள்,  (நரகத்தில்   பிறந்து),  எக்கம் - ஏகமாக, (அதாவது :
ஒன்றாகவே  நீங்காமல்),    துணை தங்களைச் சேர்ந்திராநின்றதாகிய,
மிக்க   - அதிகமாகிய, துயரத்திடை - அஸாதாதி துன்பங்களிலேயே,
உழைப்பார் - பொருந்திச் சுழன்று சிரமப்படுவார்கள், எ-று.      (26)

956. கொலைகளவு பொய்பொருளி னாசையின் மகிழ்ந்தார்
    மலையின்மிசை வட்டென வுருட்டவிழு கின்றார்
    குலநல குடிப்பெரிய கற்பழிய மேவும்
    புலைமகளிர் காரகலிற் புழுக்களெனப் பொரிவார்.

     (இ-ள்.)   கொலை   -    ஜீவவதை   செய்வதும்,  களவு -
பிறருடைமையைத்   திருடுவதும்,    பொய்  - அசத்தியம் பேசலும்,
பொருளினாசையில்    - (மண், பொன், பொண்ணாதி) பரிக்கிரகத்தில்,
மிகுந்த ஆசையுமாகிய இவைகளில், மகிழ்ந்தார் -