இச்சித்து அவற்றிற்குரிய காரியங்களைச் செய்தவர்கள், (நரகத்தில்
பிறந்து புராதனநாரகர்களால்), மலையின்மிசை - பர்வதங்களிலேற்றி,
வட்டென - குண்டுகளைப்போல, உருட்ட - அங்கு நின்றும்
உருட்டித்தள்ள, விழுகின்றார் - விழுந்தலறா நின்றார்கள், குலம் -
உயர்குலத்தினும், நல்ல குடி - நற்குடிப் பிறப்பைக் காட்டிலும், பெரிய
- மிகுந்த குணமுடைய, கற்பு - பதிவிரதா தன்மையானது, அழிய -
கெடும்படி, மேவும் - (அன்னிய புருஷர்களை மோஹ புத்தியால்)
பொருந்தும், புலைமகளிர் - துர்க்குணமாகிய நீசத்துவமுள்ள ஸ்த்ரீகள்,
கார் - கறுத்த, அகலில் - நெருப்பில் வெந்த இரும்பு ஓட்டில்,
புழுக்களென - புழுக்களைப்போல, பொரிவார் - (அக்னிதாபத்தினால்)
பொரிந்து வருந்துவார்கள், எ-று. (27)
957. தோலினை யுரித்திடு நிணத்தடி சுவைத்தார்
சோலைபுக நீ ணெருப்பு சொரியவுரி கின்றார்
மாலைகுடை மன்னவரை வஞ்சனைசெய் தமைச்சர்
சாலக்கழு நிறத்திலுறத் தாமங்கணைந் திருப்பார்.
(இ-ள்.) தோலினை - சரீரத்தின் மேற்றோலை, உரித்து -
கழற்றி, இடும் - அத்தோலின் கீழிடப்பட்டுள்ள, நிணம் - இரண
சம்பந்தமாகிய, தடி - மாமிசங்களை, சுவைத்தார் - தின்றவர்கள்,
(நரகத்திற் சேர்ந்து), சோலை புக - நிழலுக்காகத் தோப்புகளிலடைய,
நீள் - பெரிதாகிய, நெருப்பு - அக்கினியானது, சொரிய -
அத்தோப்புகளில் மேனின்றும் விழுதலால், உரிகின்றார் - தங்கள்
மேற்றோலுரிந்து வேதனை யடைகின்றார்கள், மாலை -
மாலைகளணிந்த, குடை - வெள்ளைக் குடையையுடைய, மன்னவரை -
அரசர்களை, வஞ்சனை செய்த - கபடஞ் செய்தே மாற்றிய, அமைச்சர்
- மந்திரிகள், (நாரகர்களாகப் பிறந்து), சால - மிகவும் பெரிதாகிய, கழு
- கழுமரங்கள், நிறத்தில் - சரீரத்தில், உற - பொருந்தித் தைத்துக்
கொள்ளும்படி, (புராதன நாரகர்கள் செய்விக்க), தாம் -
நூதனநாரகர்களாகிய தாங்கள், அங்கு - அவ்விடத்தே
அக்கழுமரத்தில், அணைந்து - சேர்ந்து, இருப்பார் -
வருத்தமுற்றிருப்பார்கள், எ-று.
‘செய்த அமைச்சர்" என்பது, ‘செய்தமைச்சர்" எனத்
தொகுத்தலாயிற்று. (28)
958. இனையதுய ரெண்ணரிய வுடையவெழு நிலத்தில்
வினையிலிரண் டாநரகின் வீழ்ந்தவுனை மீட்டல்
முனிவரிறை தனக்குமரி தாயவுள தாகும்
இனியெனுரை யென்னினு மிதஞ்சிறி துரைப்பேன்.
(இ-ள்.) எண்ணரிய - கணக்கில்லாததாகிய, துயர் - துன்பத்தை,
உடைய - உடைத்தாகிய, இனைய - இத்தன்மைத்தாகிய, எழுநிலத்தில்
- ஸப்த |