|  
       மானது,  கெடும்  வண்ணம்  - நீங்கும் விதமாக, அறப்பொருள் - தர்ம 
        வசனமாகின்ற    தத்துவார்த்தங்களை,   உரைப்பன் - சொல்லுவேன், 
        எ-று.	                                                 (31)	 
      961.	முனைத்துன்மிசை வந்தவர்கண் மேன்முனித லின்றி 
            நினைத்திடிது முன்னையென் வினைப்பயன தென்றே 
            மனத்தின்மற மேவின்மிகு பாவம்வரும் வந்தா 
            லுனைப்பினை விலங்கினிடை யுய்த்திடரை யாக்கும்.	 
           (இ-ள்.)   உன்   மிசை  - உன் மேல், முனைத்து -  கோபித்து, 
        வந்தவர்கள்    மேல்    -    சண்டைக்கு வந்த நாரகர்களின் மேல், 
        முனிதலின்றி - நீ கோபத்தைச் செய்தலின்றி, இது - இத்தன்மையானது, 
        முன்னை    - பூர்வத்தில்,    என்   - என்னாற்      செய்யப்பட்ட, 
        வினைப்பயனதென்று    - கர்மோதய   விளைவென்று, நினைத்திடு - 
        தியானிப்பாயாக,    (அப்படியல்லாமல்),    மனத்தின் - உன்னுடைய 
        மனதில்,    மறமேவின்   -    பாபகாரணங்களாகிய குரோதாதிகளை 
        யடைவாயானால்,    (அவ்வந்தரங்க     பரிணாமத்தினால்), மிகு - 
        மிகுதியாகிய,    பாவம்    - திரவிய பாபகர்ம பிரகிருதிகள், வரும் - 
        ஆத்மனிடத்தில்   ஆஸ்ரவமாகும், வந்தால் - அப்படி ஆஸ்ரவமாகி 
        ஆத்மப்  பிரதேசபந்தமும் ஸ்திதிபந்தமுமானால் (அதனால்), உனை - 
        உன்னை, (அனுபாக    பந்தமாகிய தன்மையாலே), பின்னை - பிறகு, 
        விலங்கினிடை   -    திரியக்கதியினிடத்தில், உய்த்து - அடைவித்து, 
        இடரையாக்கும் - துன்பத்தைச் செய்விக்கும், 
      எ-று. 											           (32)	 
      962.	அறிவன்முத லைவர்சர ணம்புகுதி யாயிற் 
             பிறவிமறு சுழியின்வழி யொழுகுதல் பிழைத்தி 
             கறுவுசெறி வுறுதலொடு வத்துவை யழித்தா 
             லிறுதியில்பல் தீவினைக ளெய்தியடு நின்றே.	 
           (இ-ள்.)அறிவன் முதல் -அருகத்பரமேஷ்டி முதலாகிய, ஐவர் - 
        பஞ்ச    பரமேஷ்டிகளை,   சரணம் - ரக்ஷணையாக, புகுதியாயில் - 
        சேர்வாயாகில்,    (அதாவது   பஞ்சபரமேஷ்டிகளைத் தியானித்தால் 
        அதனாலே),   பிறவி   - ஸம்ஸார சமுத்திரத்தின், மறு - சுழலுகின்ற, 
        சுழியின்    -    நீர்ச்சுழலினது,    வழி - மார்க்கத்தில், ஒழுகுதல் - 
        வீழ்கின்றதினின்றும்,     பிழைத்தி    - நீ       நீங்கினவனாவாய், 
        (அப்படியில்லாமல்),    கறுவு    - நீங்காத     குரோதாதிகளையும், 
        செறிவுறுதலொடு    -    சேர்தலோடு, வத்துவை - ஆத்மத் திரவிய 
        சுபாவகுணத்தை,  அழித்தால் - கெடுத்தால், (அதனால்), இறுதியில் - 
        முடிவில்லாத,     பல் - பலவாகிய, தீவினைகள் - திரவிய பாபங்கள், 
        எய்தி - ஆத்மனிடத்தில் அடைந்து , நின்று - பந்தித்து நின்று, அடும் 
        - துக்க பலனை உதிப்பித்து ஆத்மனை வருந்தப்பண்ணும், எ-று. 			(33)	 
      963.	வீட்டினை விளைக்குநல காட்சியினை விட்டிம் 
           மோட்டுநர கத்துயர் முழங்கழலின் வீழ்ந்தாய்  |