மீட்டுநர கத்திடை விழாதவகை வேண்டிற்
காட்சிதலை நின்றொழுகு காதன்முத னீத்தே.
(இ-ள்.) வீட்டினை - மோட்சத்தை, விளைக்கும் .
உண்டுபண்ணும்படியான, நல - நன்மையாகிய, காட்சியினை -
ஸம்மியக்தரிசனத்தை, விட்டு - (யோஜித்துப் பெறாமல்) விட்டுவிட்டு,
இம்மோட்டு நரகத்துயர் - இந்தப் பெரிதாகிய நரக
துன்பங்களையுடைய, முழங்கு - பெரிதாகி எரிகின்ற, அழலின் -
அக்னிக்குச் சமானமாகிய ஸந்தாபத்தினையுடைய பூமியிலே, வீழ்ந்தாய்
- வீழ்ந்தனை, மீட்டு - மறுபடி (அதாவது : இனிமேல் வரும்
பிறவிகளில்), நரகத்திடை - இப்படிப்பட்ட நரகங்களில், விழாதவகை
- அடையாதவகையை,வேண்டில்- நீ இச்சிப்பாயேயாகில், காதல் முதல்
- அன்னியத் திரவியாபேட்சையாகின்ற பாகியாப்பியந்தர பரிக்கிரக
வாஞ்சை முதலியவற்றை, நீத்து - பரிஹரத்து (அதாவது : நிர்காம்
க்ஷையாகி), காட்சி - ஸம்மியக்தரிசனமாகின்ற தத்வார்த்த
சிரத்தானத்தில், தலை நின்று - முதன்மையாக நின்று (அதாவது :
ஹேயோபாதேயங்களைத் தெரிந்து, உபாதேய ஸ்வரூபத்தில்), ஒழுகு -
நடக்கக்கடவாய், எ-று. (34)
964. வெகுளிமத மாயைமிகை பற்றலிவை வினைக்குப்
புகுதும்வழி நல்லவல பொறைவளைவு செம்மை
நகையொடுவந் தீதலிவை நல்வினைக்கு வாய்தல்
பகையுறவு பணிவுதெளி வின்பங்களைப் பயக்கும்.
(இ-ள்.) வெகுளி - குரோதமும், மதம் - மானமும், மாயம் -
மாயாச்சாரமும், மிகைபற்றல் - அதிலோபமுமாகிய, இவை - இந்தச்
சதுர்விதமாகிய கஷாய பரிணாமங்கள், வினைக்கு - பாபகர்மங்களுக்கு,
புகுதும் - அடைகின்ற, வழி - வழிகளாகும், நல்ல - நன்மையாகிய,
வல - ஸம்மியக்துவ வல்லமை பொருந்திய, பொறை - க்ஷமையும்,
(அதாவது : பிரசமமென்கிற உபசமபாவமும்), வளைவு - வணக்கமும்,
செம்மை - (மாயத்தினகன்ற) உண்மையும், நகையொடு -
முகமலர்ச்சியுடன், உவந்து - உள்ளமுவந்து, ஈதல் - சத்பாத்திரங்களில்
ஆகாராதிகளை யளிப்பதுமாகிய, இவை - இவைகள், நல்வினைக்கு -
புண்ணிய கருமங்களுக்கு, வாய்தல் - வரப்பட்ட வழியாகிய
காரணங்களாகும், (ஆகையால், நாரகனே!), பகை - ஆத்மனுக்குச்
சத்துருவாகித் துன்பத்தைத்தரும் பாபகர்ம காரணங்களையும், உறவு -
மித்துருவாகி இன்பத்தைத்தரும் புண்ணிய கர்மகாரணங்களையும்,
தெளிவு - இவைகளைத் தெளிதலென்னும் ஸம்மியக்துவத்தினாலாகிய,
பணிவு - பிராணி ஸம்யமம் விஷயஸம்யமங்களும், இன்பங்களை -
அப்பியுதயநிஸெ்ரீயஸ சுகங்களை, பயக்கும் - ஆத்மனுக்கு
உண்டுபண்ணும், எ-று. (35)
965. என்றிக்கதி நீங்குவதென் றேதமுற வேண்டா
நின்றவினை நீங்கிய கணத்திதுவு நீங்கு |