46மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

மியத்துவமும்,  தக்க  நாமம்  - சுபநாமகர்மமும், மேலாய கோதம் -
உச்சைர்  கோத்திரமும்,  வாழும்  - வாழ்கின்ற, தேவர்மானவராயு -
தேவாயுஷ்யம்   மனுஷ்யாயுஷ்யங்களும்,  போதம்  -    ஞானமும்,
பொருளோடு - ஐஸ்வரியமும், இன்பம் - சௌக்கியமும்,  புகழ்ச்சி -
யசஸும்,  மீக்கூற்றம்  -  மேன்பாடும், மன்னர்க்கு -  அரசர்களுக்கு,
ஆதியாம்  -  முதன்மையாகிய,  தன்மை -  சக்ரவர்த்தி தன்மையும்,
நல்கி -  கொடுத்து,  அறவரசு -  தர்ம  சக்ரத்துக்கு  அதிபதியாகிய
அரஹந்த பதவியையும், ஆக்கும் - உண்டாக்கும், எ-று.       (96)

 97. காதியுங் கருணை யின்மை யாதியாற் கட்டி நின்ற
    வேதனை முதல வெல்லாம் வெந்துயர் விளைக்கும் பாவ
    மோதிய விரண்டும் யோகி னுயிரினை யுறுத லூற்றாந்
    தாதுறக் காய்ந்த போழ்திற் றானுறு நீரை யொத்தே.

    (இ-ள்.)  காதியும்  -  காதி  கர்மத்தினுடைய  உதயத்தினாலும்,
கருணையின்,  மையாதியால்  - அகாருண்யம் முதலியவைகளினாலும்
(அதாவது  :   அகாருண்யம்,  அப்ரஸன்னபாவம்,  அகுணானுராகம்,
அத்தியானப்ரவர்த்தி,     அப்ரசஸ்தப்ரவர்த்தி,   அஞ்ஞானவிருத்தி,
அதபோனு   ப்ரயோகமுமாகிய   இந்த  ஏழினாலும்),  கட்டிநின்ற -
பந்தித்திராநின்ற,  வேதனை  முதலவெல்லாம்  -   அசாதவேதநீயம்
முதலாகிய  சமஸ்தத்தையும்,  வெம் -  வெப்பம் பொருந்திய, துயர் -
நரகாதி    துக்கங்களையும்,    விளைக்கும்    -   உண்டுபண்ணும்,
(அஃதியாதென்றால்)   பாவம்   -   பாப  பதார்த்தமாம்,  ஓதிய  -
சொல்லப்பட்ட,  இரண்டும்  -  புண்ணியபாப  மிரண்டும், யோகின் -
மனவசன   காய   பரிணாமங்களினால்,    உயிரினை  -  ஸம்ஸார
சீவன்களை,  உறுதல்  - அடைதலானது, தாது - இரும்பானது, உற -
மிகுதியாக,  காய்ந்த  போழ்தில்  - அக்கினியிற்  காய்ந்த காலத்தில்,
உறு   -   அதனிடத்தில்  அடைந்த,  நீரையொத்து  -  ஜலத்துக்கு
ஸமானமாகி, ஊற்றும் - ஆஸ்ரவமாகும், எ-று.

               (தான் - அசை).                          (97)

 

 98. ஈனமே யதிக மீரா பதகமே சாம்ப ராயம்
    ஞானமே ஞான மின்மை நல்லவாம் புண்ணிய பாவந்
    தேனுலா மலங்கல் வேந்தே தவியமே பாவமென்று
    தானெலா வுயிர்க்கு மாகு மூற்றிவை தாம்பத் தாகும்.

     (இ-ள்.)   தேன் -  மதுவானது, உலாம் -  வியாபித்திராநின்ற,
அலங்கல் - மாலையையணிந்த, வேந்தே - வைஜயந்த  மகாராஜனே!,
ஊற்று - ஆஸ்ரவமானது. ஈனமே - ஹீநாஸ்ரவமென்றும்,  அதிகம் -
அதிகாஸ்ரவமென்றும்,   ஈராபதகம்   -  ஈரி  யாபதாஸ்ரவமென்றும்,
சாம்பராயம்      -      கஷாயாஸ்வரமென்றும்,     ஞானம்    -
ஞானாஸ்ரவமென்றும்,  ஞானமின்மை  -  அஞ்ஞானாஸ்ரவமென்றும்,
நல்லவாம் - நன்மை