மறுபடி இப்பூமியில் வந்து, மன்னிய - நிலை பெற்ற, புகழினான் -
புகழ்ச்சியையுடையவனாகிய, சஞ்சயந்தன் - சஞ்சயந்த
பட்டாரகனானான், தன் வரவு - அவனது பிறப்பின் வரிசை, இதாம் -
இத்தன்மையாகும், எ-று. (18)
988. வயிரத்தை யொருவர்க் காக்கி யிருவர்க்கும் பிறவி தோறுந்
துயரத்தை விளைத்தல் சொன்னா லிவர்களே சொல்ல வேண்டாம்
மயரிகண் மறத்தி னீங்கி நாகபா சத்தை வாங்கி
யுயிரொத்திங் கிவனோ டொன்றி யொழுகுநீ யுரகர் கோவே.
(இ-ள்.) உரகர் கோவே - தரணேந்திரனே!, வயிரத்தை -
வைரபாவத்தை, ஒருவர்க்கு - ஒருவருக்கு, ஆக்கி - உண்டு பண்ணி,
இருவர்க்கும் - இந்த இரண்டு பேர்களுக்கும், பிறவிதோறும் - பவம்
பவந்தோறும், துயரத்தை - துக்கத்தை, விளைத்தல் - உண்டு
பண்ணிக்கொண்டதை, சொன்னால் - சொல்லினால், இவர்களே - இந்த
இரண்டு பேர்களே அதற்குப் போதுமான சாட்சிகள்,
சொல்லவேண்டாம் - இனி வேறொருவரைச் சொல்ல
வேண்டியதில்லை, (ஆகையால்), மயரிகண் - மயக்கத்தையுடைய இந்த
வித்துத்தந்தன் மேலாகிய, (மறத்தின் - வைரபரிணதியாகிய
பாபத்தினின்றும், நீங்கி - விலகி, நாகபாசத்தை - இவனைக்கட்டின
நாகபாசத்தை,வாங்கி - விடுவித்து, இங்கிவனோடு - இவ்விடத்து இந்த
வித்துத் தந்தனோடு, ஒன்றி - சினேகத்திற் பொருந்தி, உயிரொத்து -
உனதுயிர்க்குச் சமானமாக, (இவனைக் கருதி), ஒழுகு - தயாபரிணதியிற்
கூடிச் செல்லக்கடவாய், எ-று. (19)
989. என்றலு மிறைவ வன்றென் னரகத்து ளிடும்பை தீர்த்தா
யின்றுமிப் பிறவி யெல்லா நின்றவா றெனக்குச் சொல்லி
வென்றவ ரறத்திற் காட்சி விமலம தாகச் செய்தா
யென்றனக் கிறைவ னீயே யின்னமொன் றருளிச் செய்வன்.
(இ-ள்.) என்றலும் - என்று ஆதித்யாபதேவன் சொல்லவும்,
(தரணேந்திரன் அவனை நோக்கி), இறைவ - நாதனே!, அன்று -
அப்பொழுது, என் - என்னுடைய, நரகத்துள - நரகத்திளுண்டாகிய,
இடும்பை - துன்பங்களை, தீர்த்தாய் - தர்மப் பிரபோதனஞ் செய்து
நீக்கினாய், இன்றும் - இப்பொழுதும், இப்பிறவியெல்லாம் - இந்தப்
பிறப்புகளெல்லாம், நின்றவாறு - உண்டாகிய விதத்தை, எனக்குச்
சொல்லி -எனக்குத் தெரியும்படி சொல்லி, வென்றவர் - கருமங்களை
ஜெயித்த ஜினேந்திரனாற் சொல்லப்பட்ட, அறத்தில் - ஸ்ரீ
ஜினதருமத்தினால், காட்சி - தர்சனத்தை, விமலமதாக -
தோஷரஹிதமாக (அதாவது : சுத்த ஸம்மியக்த்வமாக), செய்தாய் -
எனக்குத் தெளியச் செய்தாய், என் தனக்கு - எனக்கு, இறைவன் -
குருவானவன், நீயே - நீயே, இன்னம் - இன்னமும், ஒன்று - ஒரு |