பிறவிமுடிச்சருக்கம் 467


 

காரியமுண்டு,    (அதை),    அருளிச்   செய்வன்   -   அன்புடன்
சொல்லுகின்றேன், (கேட்பாயாக), எ-று.                      (20)

990. விஞ்சையின் வலியிற் போகி மேதக்கோர் தம்மை வவ்வித்
     தஞ்சிறை வைக்கும் வித்துத் தந்தன்றன் குலத்து மிக்க
     விஞ்சையைப் பறித்து வீழ்ந்த சிறகுடைப் பறவை போல
     விஞ்சைமா நகரத் துள்ளே யிருத்துவ னிவரை யின்றே.

     (இ-ள்.)  விஞ்சையின்    -   வித்தைகளினுடைய, வலியில் -
வல்லமையினால்,    போகி - ஆகாயமார்க்கமாக விமானத்திற்சென்று,
மேதக்கோர் தம்மை - மேன்மை பொருந்திய குணமுடையவர்களையும்,
வவ்வி  - பிடித்து, தஞ்சிறை - தங்களிடம் கொண்டு வந்து சிறையாக,
வைக்கும்   -   வைக்கின்ற,    வித்துத்தந்தன்   தன்   -    இந்த
வித்யுத்தம்ஷ்ட்ரனுடைய, குலத்து - குலத்தார்களில் உண்டாகிய, மிக்க
விஞ்சையை - மஹா வித்தைகளை, பறித்து - அவர்கட்காகாமல் தடை
செய்து    நீக்கி,   வீழ்ந்த சிறகுடை - சிற குதிர்ந்திருக்கின்ற, பறவை
போல - பட்சியைப்போல, இவரை - இவ்வித்தியாதர வம்சத்தார்களை,
இன்று - இப்பொழுது,   விஞ்சைமா    நகரத்துள்ளே - வித்தியாதரர்
வசிக்கின்ற   பட்டணங்களிலேயே,  இருத்துவன்    - ஸ்தாபிப்பேன்,
எ-று.                                                  (21)

991. என்றிடா வுரைப்ப வாதித் தாபனிப் பிழைபொ றென்னப்
    பொன்றிடாக் கேதஞ் சூழா திவர்களென் வெகுளி நீங்கா
    தென்றிடா வுரைத்து மேனா ளிறைவநின் னருளி னாலே
    மன்றுலாங் குழலி னார்க்கே மாவிஞ்சைப் பணிசெய் கென்றான்.

     (இ-ள்.) என்றிடா - என்று, உரைப்ப - சொல்ல,ஆதித்தாபன் -
ஆதித்யாபதேவன், (அவனை   நோக்கி தரணேந்திரனே!), இப்பிழை -
இவனால்   செய்யப்பட்ட    இந்தத் தவறுதலை, பொறு - நீ க்ஷமைப்
பண்ணிக்கொள்,   என்ன  - என்று சொல்ல, (அதற்கவன்), இறைவ -
நாதனே!,   இவர்கள் - இவ்வித்தியாதர வர்க்கத்தார்கள், பொன்றிடா -
என்னால்    இறவாமலும், கேதம் சூழாது - இவர்கட்கு என்னால் ஒரு
பொல்லாங்காகிய   தண்டனை    பற்றாமலும், என் வெகுளி - எனது
கோபம்,   நீங்காது    -  நீங்கமாட்டாது, என்றிடாவுரைத்து - என்று
சொல்லி,    (மேலும்),    மேனாள்    -    இனிவருங்   காலத்தில்,
நின்னருளினாலே - உனது  தயாபரிணாமானு சாரத்தினால், மன்றுலாம்
- வாசனை  வீசும், குழலினார்க்கு - அளகத்தையுடைய இவ்வம்ஸத்து
ஸ்த்ரீமார்களுக்கு, மாவிஞ்சை    - மஹா வித்தைகள், பணிசெய்க -
சாதகமாகி ஏவல் செய்க, என்றான் - என்று சொன்னான், எ-று. (22)

992. இவ்வண்ணஞ் செய்தி டேனே லிருட்பிழம் பிரண்டு மின்னுக்
    கவ்விய தனைய மேனிக் கடையர்தங் களிப்பி னாலே