பிறவிமுடிச்சருக்கம் 471


 

றோர்  சங்கங்களில், ஆயும் - ஆராய்ந்தறியும் பொருளும், நீ - நீயே,
ஒரு    நிலையிலா    நிலையை   -  ஒரு நிலையலாத நிலைமையை
யுடையவன்,   (அதாவது :   அர்த்தபரியாயத்தால்    உத்பாத, வ்யய,
த்ரௌவ்ய     யுக்த    ஸத்தா    லக்ஷண    சுத்த   திரவிய குண
பரியாயத்தையுடையவனாக), நீயாகிலும் - நீ இருந்தபோதிலும், உலகில்
- இவ்வுலகத்தில், நீ - நீ, உள்ளாய் - துருவமாகவிருக்கிறாய், இறைவ
- நாதனே!, எ-று.                                        (29)

     1உலகின் - திரிலோகத்தையும், உள்ளாய் - உன்னுடைய அனந்த
ஞானத்திற்குள்   அடக்கிக்கொண்டவனும்,    நீ  - நீயே, (அப்படி நீ
உலகத்தை  உனக்குள் அடக்கிக்கொண்டு)உலகின் - இவ்வுலகத்திலும்,
உள்ளாய் - நீயும் ஒருபொருளாய் இருக்கிறாய், இறைவ - இறைவனே!,
என்று பொருள் கூறுவோருமுளர்.

     உலகின் - உருபுமயக்கம்.

999. அமலனீ யறிவனீ யருகனீ யசலனீ
     விமலனீ வீரனீ வேரமி லொருவனீ
     துமிலனீ துறவனீ சுகதனீ சிவனுநீ
     கமலனீ கருணைநீ கைவலச் செல்வனீ.

     (இ-ள்.) அமலன்  - மலமில்லாத நிர்மல ஸ்வரூபன், நீ - நீயே,
அறிவன்     -   சுத்தசேதனா பிரத்தியக்ஷ ஸ்வாத்மோத்தகுண, ஸ்வ,
பரப்பிரகாசனா   ஸர்வஜ்ஞனும்,  நீ - நீயே, அருகனீ - யோக்யனும்
நீயே,    அசலனீ    - சலனமில்லாதவனும் நீ, விமலனீ - தன்னிலை
யெய்தின பரிசுத்தனும் நீயே, வீரனீ - ஸ்வயம்புகுண சக்த சுத்த சக்தி
யுக்த   அனந்த   வீரியனும்   நீயே, வேரமில் - வைரபாவ மில்லாத,
ஒருவன்   -   ஒற்றுமையானவன்,   நீ  - நீயே, துமிலனீ - ஓங்கார
வடிவனும்   நீயே,   துறவனீ - பாகியாப்பியந்தர பரிக்கிரகரஹிதனும்
நீயே,   சுகதனீ  - அனந்த    சுக    ஸ்வரூபியும் நீயே, சிவனு நீ -
மோக்ஷமங்களனும் நீயே, கமலன்நீ - பத்மாஸனனும் நீயே, கருணை நீ
- ஸர்வ    ஜீவதயாபரனும்    நீயே,   கைவலச்  செல்வனீ - நிச்சய
ஆத்மத்திரவிய   ஸ்வரூபமாகிய  கேவல லக்ஷ்மியையுடைவனும் நீயே,
எ-று.

     ‘சுகதனீ விகதனீ" எனவும் பாட பேத முண்டு.             (30)

1000. இறைவனீ ஈசனீ எண்குணத் தலைவனீ
     பொறியிலா வறிவனீ பூசனைக் கிறைவனீ
     மறுவிலா வொருவனீ மாதவத் தலைவனீ
     சிறியயா னின்குணஞ் செப்புதற் கரியனீ.

     (இ-ள்.)  இறைவன் நீ - நாதனும் நீயே, ஈசன் நீ - முதல்வனும்
நீயே,   எண்   குணத்தலைவனீ   -   அனந்தஜ்ஞானாதி    அஷ்ட
குணத்தலைவனும்    நீயே,    பொறியிலாவறிவனீ   -   அதீந்திரிய
ஞானஸ்வரூபனும் நீயே, பூசனைக்கு இறை