(இ-ள்.)
(அவ்வாறு பிறந்த அக்குழந்தைகள் வளருங்காலத்தில்)
மங்கையர் - தாய்மார்களுடைய, கொங்கையென்னும்
-
ஸ்தனங்களென்னும், குவட்டினின்று - பர்வத சிகரங்களினின்றும்,
இழிந்து - இறங்கி, (அதாவது : முலைப்பாலுண்டு
அதை மறந்து
பின்பு), நல்ல - நன்மையாகிய, சிங்கப்
போதகங்கள் போல -
சிங்கக்குட்டிகளைப்போல, தவிசிடை - மெத்தைகளின்மேல், தவழ்ந்து
சென்று - தவழ்ந்தோடி, (அதன் பிறகு),பங்கயத்தலங்கள் போலும்
-
தாமரைத் தளங்களுக்குச் சமானமாகிய, பவழம் - பவளம்போற் சிவந்த,
சீறடியை - சிற்றடிகளை,
பாராம்மங்கை தன் சென்னி -
இப்பூமிதேவியாகிய பெண்ணினுடைய சிரசில், சூட்டி
- அணிந்து,
மாலையாக - ஒழுங்காக, நடந்திட்டார் - நடந்தார்கள், எ-று. (9)
1020. நாவிளங் கொம்பி னல்ல கலையல்கு னலத்தை யுண்டு
மாவிளங் களிறு தேர்வாள் விற்றொழில்
வல்ல ராகித்
தேவிளங் குமரர் போலத் தேசொடு திளைக்கு
மேனிக்
கோவிளங் குமரர் காமன் குனிசிலைக் கிலக்க
மானார்.
(இ-ள்.) (அதன்மேல்),
கோவிளங்குமரர் - அந்த இளமையாகிய
இராஜகுமாரரிருவரும், நாவிளங்கொம்பின் - நாவிலுறையும்படியான
இளங்கொடிபோன்ற ஸரஸ்வதி தேவியின், நல்ல - நன்மையாகிய,
கலையல்குனலத்தை - மேகலையணிந்த அல்குல்
நலத்திற்குச்
சமானமாகிய சதுச்சஷ்டி கலைஞானங்களையும் அதனாலாகும் அழகிய
பலன்களையும், உண்டு - அனுபவித்து, (அதாவது : தத்துவ சாஸ்திர
நிபுணர்களாகி), மா - குதிரை ஏறுதலும்,
இளங்களிறு -
இளம்பருவமுள்ள யானைகளை ஏறிச் செலுத்துவதும், தேர் - இரத
சாரத்தியஞ் செய்வதும், வாள் - வாள் வீசுதலும்,
வில் - வில்
பழக்கமும், (ஆகிய), தொழில் - தொழில்களில்,
வல்லராகி -
வல்லமையையுடையவர்களாகி, தேவிளங்குமரர்போல - இளமையாகிய
தேவகுமாரர்போல, தேசொடு - ஒளியோடு, திளைக்கும் - பொருந்திய,
மேனி - சரீரமுடைய, காமன் - மன்மதனுடைய, குனி - வளைந்த,
சிலைக்கு - கருப்பு வில்லுக்கு, இலக்கமானார் -
குறியானார்கள்,
(அதாவது : யௌவனவயதையடைந்தார்கள்), எ-று.
(10)
1021. கடைந்தநல் லலகம் பென்னக் கறுத்திடை வெளுத்துச் சூழ
மடங்கல்போன் மொய்ம்பின் மைந்தர் மனத்தினைக் கணத்த ழிக்குந்
தடங்கணம் பாக நல்லார் தனுவில்நா ணேற்றித்
தானங்
கடங்கிநின் றனங்கன் மைந்த ருள்ளத்தை
யழிக்க லுற்றான்.
(இ-ள்.) (அவ்வாறு
யௌவனத்தை யடைந்த காலத்தில்),
கடைந்த - கடைசற்பிடித்த, நல் - நன்றாகிய,
அலகு - கூர்மை
பொருந்திய, அம்பென்ன - |