மாகிற, மாயத்தின் -
நிலையில்லாத தன்மையுள்ள, வடிவு -
ஸ்வரூபமும், (ஆகிய), எல்லாம் - இவைகளெல்லாம், நினைப்பில் -
தியானத்தில், ஆம் - உண்டாகின்ற,
(அதாவது : இவற்றைச்
சிந்திக்கின்ற), மனத்தினார்கள் -
ஸம்வேக பாவனையையும்
வைராக்கிய பாவனையையுமுடைய இக்குமாரர்களிடத்தில், நுகர்ச்சி -
பஞ்சேந்திரிய விஷய வனுபோகமானது, நோயொத்த - வியாதிக்குச்
சமானமாகியது, செல்வம் - ஐஸ்வரியமானது,
நுரையொத்த -
ஜலத்திலுண்டாகின்ற நுரையொத்தது, இளமை - பாலப்பருவமும், தேசு
- சரீர தேஜஸும், காயத்து - ஆகாயத்திலுண்டாகும், வில்லையொத்த
- இந்திரதனுசிற் கொப்பாகியது, (இத்தகைய பாவனையுடைய), அங்கு
- அந்த மனத்தினிடத்தில், காமனுக்கு -
மன்மதனுக்கு, இடம்
உண்டோ - தங்குதற்கு இடமுண்டாகுமோ? (ஆகாது), எ-று.
இங்ஙனம் கூறியதனால் அவர்களிடம்
விராகம் மேலிட்டதென்பது
பெறப்படும். (13)
வேறு.
1024. அனித்தமர ணின்மையுற வின்மைபிறி தின்மை
யுனற்கரிய மாற்றுலக மூற்றுதர லுவர்ப்பு
நினைப்பில்வருஞ் செறிப்புதிர்ச்சி போதிபெறற்
கருமை
மனத்தின்வர னினைத்துமனை யறத்தொழுகும்
வழிநாள்.
(இ-ள்.) (இவ்வாறாகி),
அனித்தம் - சரீராதிகளினது அனித்தியத்
தன்மையையும், அரணின்மை - பந்துக்களும்
திரவியங்களும்
ரக்ஷணையாகாத விதமாகிற அசரண பாவனையையும், உறவின்மை.
உடலாதிபரத் திரவியங்கள் அன்னியத்துவமென்பதையும், பிறிதின்மை -
ஆத்மகுண ஞானாதிகள் ஏகத்துவமான தன்மையையும், உனற்கரிய -
நினைத்தற்கரியதாகிய, மாற்று - ஸம்ஸார அஸாரத்தையும், உலகம் -
இந்த லோகத்தினது தன்மையையும், ஊற்றுதரல்
- ஆத்மனுக்கு
மித்தியாதர்சனாதி விபாவ குணத்தாலாகும் பாவாஸ்ரவத் திரவியாஸ்ரவ
ஸ்வரூபத்தையும், உவர்ப்பு - அசுசித்துவத்தையும்,
நினைப்பில்
வருசெறிப்பு - பாவஸம் வரை
நிமித்தமாக வரும்
திரவியஸம்வரையையும், உதிர்ச்சி -
பாவ நிர்ஜ்ஜரை திரவிய
நிர்ஜ்ஜரைகளின் விதாயத்தையும், போதி
பெறற்கருமை - நிச்சய
ஸம்மியக் ஞானம் லப்தமாவ தருமையாகிய போதி துல்லபமென்கிற
தன்மையையும், மனத்தின் - மனதிலே, வரல் - இவைகள் வருதலாகிய
தர்ம ஸ்வாக்கியாயத்தையும், நினைத்து -
இந்த துவாதசானுப்
பிரேட்சைகளை தியானித்து, மனையறத்து - கிரஹஸ்த் தர்மத்தில்,
ஒழுகும் நாள் வழி - இக்குமாரர்கள் செல்கின்ற காலத்தில், எ-று. (14)
1025. அமலநல வாடியகத் தானநிழற் போல
துமிலமிடை மூவுலகுந் தோன்றுமறி வுடைய |