செந்தாமரைப் புஷ்பத்தின்மேல், இறைநான்கின்
- சதுரங்குலத்துக்கு
மேலே, மேவி - பொருந்தி, எழுந்தருளுமென
- ஸ்ரீ விஹாரம்
வருவாரென்று, வானோர் - தேவர்கள், எழில் - அழகு பொருந்திப்
பிரகாசியாநின்ற, மணி -
இரத்தினங்களாலும், பொன் -
ஸ்வர்ணத்தினாலும், ஓசனை யிரண்டகன்ற -
இரண்டு யோசனை
யகலமுடையதாகிய, மண்டபமொன்று - ஒரு மண்டபத்தை, அமைத்தார்
- நிர்மா பணஞ் செய்தார்கள்,
(அவ்வாறு செய்து), உடன் -
அப்பொழுது, முத்தின் -
முத்துக்களினால், (மணற்
பரப்புக்களையுடையதாக), ஓசனைகள் மூன்றகன்ற - மூன்றுயோஜனை
யகலமுடையதாகிய, வீதி - வீதியை, அமைத்தார் -
செய்தார்கள்,
எ-று. (17)
1028. மாருதியும் வாசமய மாகிமந்தம் வீசிப்
பாரின்மலி நுண்டுகள் பரிந்திட முயன்றான்
காரின்மிசை வந்துவரு ணன்கமல மாதி
வேரிமலர் கமழுநறு நீர்த்துவலை விட்டான்.
(இ-ள்.) (அவ்வாறு
அவற்றை அமைத்த பின்), மாருதியும் -
வாயுகுமாரனும், வாசமயமாகி -
வாஸனை மயமாக, மந்தம் -
மந்தமாருதத்தை, வீசி - வீசப்பண்ணி, பாரில்மலி
- இப்பூமியில்
மிகுந்துண்டாகின்ற, நுண்துகள் - சிறிய துளிகளை,
பரிந்திட -
பரிகரித்துச் சுத்தஞ் செய்ய, (அதாவது :
அத்தூளிகள் பறந்து
போகும்படி), முயன்றான் - முயற்சி செய்தான், வருணன் - வருண
குமாரனானவன், காரின்மிசை - மேகத்தின் மேலே, வந்து - வந்து,
கமலமாதி - தாமரைப் பூவாதியாக,
மலர் கமழும் - புஷ்ப
வாஸனைகளை வீசும், வேரிநறு நீர்த்துவலை - வாசனை பொருந்திய
நல்ல நீர்த்துளிகளை, விட்டான் -
தெளித்துக் குளிர்ச்சியை
யுண்டுபண்ணித் தூளியுபசமஞ் செய்தான், எ-று. (18)
1029. இந்திரனு மெண்மையுல காந்தியரு மிறைவன்
வந்தெழுந் தருளும்பொழு தென்றெதிர் வணங்க
இந்திரர்தங் கோனுமெழுந் தானிரு நிலத்து
ளந்தரங்க டீர்ந்தவறி வற்கியல்பி தாமே.
(இ-ள்.) (அத்தருணத்தில்),
இந்திரனும் - ஸௌதர் மேந்திரனும்,
எண்மை - எட்டுப் பிரகாரமான, உலகாந்தியரும் -
லௌகரந்திக
தேவர்களும், இறைவன் - ஸர்வஜ்ஞன், வந்து - ஸ்ரீ விஹாரமாகும்படி
வந்து, எழுந்தருளும் பொழுதென்று - எழுந்தருளுங்காலமென்று, எதிர்
- ஜினேந்திரனுடைய எதிரிலே, வணங்க -
வணக்கஞ் செய்ய,
இந்திரர்தங் கோனும் - தேவேந்திரர்களுக்கெல்லாம்
நாதனாகிய
ஸ்வாமியும், எழுந்தான் - செல்லா
நின்றான், இருநிலத்துள் -
பெரிதாகிய இப்பூமியில், அந்தரங்கள் - மோகங்கள், தீர்ந்த - நீங்கின,
அறிவற்கு - |