வீதராக ஸர்வஜ்ஞனுக்கு,
இது - இத்தன்மையாகிய ஸ்ரீ விஹார
ஆஸ்தரனாதி கிரியைகள், இயல்பாம் - ஸ்வபாவமாகும், எ-று. (19)
1030. இடிமுரசந் திமிலைகண்டை காளமெழிற் சங்கந்
துடிமுழவ மொந்தைதுண வந்தண்ணுமை செகண்டை
கடன்முகிலி னொலிகரந்து திசைகள்விம்ம
வொலித்த
தடமலரின் மிசையிறைவன் றானொதுங்கும் பொழுதே.
(இ-ள்.)
இடி - இடிபோல் சப்திக்கின்ற,
முரசம் -
பேரிகைகளும், திமிலை - பம்பையென்னும் மேளமும், கண்டை
-
பெருமணியும், காளம் - சிறு சின்னங்களும்,
எழில் - அழகு
பொருந்திய, சங்கம் - ஊது சங்குகளும்,
துடி - உடுக்கை
வாத்தியமும், முழவம் - மத்தளங்களும்,
மொந்தை - ஓர்
கட்பறைகளும், துணவம் - துணவமென்கிற வாத்தியமும், தண்ணுமை -
உறுமி மேளமும், செகண்டை -
ஜெயகண்டை யென்னும்
சேமங்கலமும், (ஆகிய இவ்வாத்தியங்கள்), தடம் - விசாலமாகிய,
மலரின்மிசை - செந்தாமரைப் பூவின்மேல்,
இறைவன் தான் -
ஸ்வாமியான ஜினேந்திரன், ஒதுங்கும்பொழுது - ஸ்ரீவிஹாரமாகுங்
காலத்தில், கடல் -
ஸமுத்திரத்தினுடையவும், முகில் -
மேகத்தினுடையவுமாகிய, ஒலி - சப்தங்கள்,
கரந்து - மறைந்து
போகும்படி, திசைகள் - எத்திக்குகளிலும், விம்ம - வியாபிக்கும்படி,
ஒலித்த - சப்தித்தன, எ-று. (20)
1031. இன்னரம்பின் யாழ்குழல்கள் வீணைமுத லேந்திக்
கின்னரியர் கிளைநரம்பி னோதினர்கள்
கீதம்
பொன்வயிர மணியமிர்த மீன்றுமல ரேந்திப்
பன்னரிய வகையினில மடந்தையெதிர் பணிந்தாள்.
(இ-ள்.) கின்னரியர் -
கின்னர தேவர்கள், இன் - இனிமையாகிய
ஒலியைச் சப்திக்கும்படியான, நரம்பின் -
நரம்பினாலாகிய
தந்திகளையுடைய, யாழ் வீணை -
யாழ்வீணையென்னும் பல
பேதங்களையுடைய வீணைகளின் வாத்தியங்களையும், குழல்கள்
-
ஊதிடுங் குழல்வாத்தியங்களையும், ஏந்தி - தரித்து, கிளை - கிளை
கிளைகளாக, கீதம் - சங்கீதங்களை, (கண்டத்தினாலும்), நரம்பின் -
தந்திப் பிரயோகத்தாலும், ஓதினர்கள் - பாடினார்கள், நிலமடந்தை -
பூமி தேவியானவள், பொன் -
பொன்களையும், வயிரம் -
வஜ்ரக்கற்களையும், மணி - பத்மராகாதி மணிகளையும், அமிர்ந்தம் -
(பூலோகத்தில் பிராணிகளுக்கு ரக்ஷணையாகிய)
ஜலமாதியான
பொருள்களையும், ஈன்று - தந்து, மலர் - புஷ்பங்களையும், ஏந்தி -
தரித்து, பன்னரிய - சொல்லுதற்கரிய, வகையின் - விதத்தினால், எதிர்
- சர்வஜ்ஞனுடைய எதிரில், பணிந்தாள் - வணங்கினாள், எ-று. (21) |