1032. சுந்தரியர் வந்தரியர் துறக்கத்திளம் பிடிய
ரந்தரையி னந்தரத்தின் வானினடம் பயின்றார்
மந்தரநன் மலர்மழைகள் வண்டினங்கள் சூழ
விந்திரர்கோ னெழுந்தருளும் வீதியெங்கும்
பொழிந்தார்.
(இ-ள்.) சுந்தரியர் -
ஜோதிஷ்கதேவ ஸ்த்ரீயர்களும், வந்தரியர் -
வியந்தரதேவ ஸ்த்ரீயர்களும், துறக்கத்திளம் பிடியர் - கல்பலோகத்து
இளம் பெட்டை யானையை நிகர்த்த நர்த்தகிகளும், அம் - அழகிய,
தரையின் - தேவ நிர்மித மண்டபத்தலத்தில்,
அந்தரத்தின் -
அந்தரமாகவிருந்து, வானின் - ஆகாயத்தில்,
நடம்பயின்றார் -
நர்த்தனம் செய்தார்கள், கோன் - ஸ்வாமியாகிய
ஜினேந்திரன்,
எழுந்தருளும் - செல்கின்ற, வீதியெங்கும், வீதிகளிலெல்லாம், இந்திரர்
- தேவேந்திரர், நல் - நன்மையாகிய, மந்தரமலர்
- கற்பக
விருட்சத்தின் பூக்களை, வண்டினங்கள் சூழ - வண்டுக் கூட்டங்கள்
மொய்க்கும்படி, மழைகள் - மழைகளைப்போல,
பொழிந்தார் -
சொரிந்தார்கள், எ-று. (22)
1033. 1வாமனர்கண் மண்ணின்மறிந் தெழுந்துநடம்
புரிந்தார்
காமம்பில வகவரசர் கரணஞ்சுழன் றெழுந்தார்
கேமங்கர நாமங்களோ ராயிரத்தோ
ரெட்டுந்
தாமங்கலம் பாடவர்க ளாமிந்திரர்
படிந்தார்.
(இ-ள்.) வாமனர்கள்
- அழகிய தேவர்கள், மண்ணின் -
இச்சமவசரண பூமியில், மறிந்து - தங்கி, எழுந்து - உயர எழுந்து,
நடம் - நர்த்தனங்களை, புரிந்தார் - செய்தார்கள், பிலவக வரசர்
-
பவணலோகத் திறைவர்களாகிய பவணேந்திரர்கள், காமம் - அழகாக,
கரணஞ்சுழன்று - கரணம் போடுதல் முதலாகிய வித்தைகளைச்
செய்து, எழுந்தார் - சென்றார்கள், இந்திரர் - கல்பாமரேந்திரர்கள்,
கேமங்கரம் - க்ஷேமத்தைச் செய்யும்படியான,
நாமங்கள் -
ஜினேந்திரனுடைய பெயர்களாகிய, ஓர் -
ஒப்பற்ற,
ஆயிரத்தோரெட்டும் - ஆயிரத்தெட்டையும், மங்கலம் - பாபவிநா
சார்த்தமாகவும் புண்ணிய வியாப்த்தியர்த்தமாகவும், பாடவர்களாம் -
பாடுகின்றவர்களாகி, படிந்தார் - பொருந்தினார்கள், எ-று.
தாம் -
அசை. 1வானவர்களென்றும் சில
பிரதிகளிற்
பாடபேதமுண்டு. (23)
1034. செங்கமல மொன்றிரண்டு பங்கயம லர்ந்தென
வங்கமலத் தறிவன்றிரு வடியிணைவைத் தளவிற்
றிங்களன குடைமும்மையும் மண்டலமுஞ் செறிந்த
பொங்கியவெண் சாமரைகள் பூமழை பொழிந்தார்.
|