490மேருமந்தர புராணம்  


 

சங்கின்    -     சங்கும்   (ஆகிய)   இருநிதிகளின்,  பேருடைய -
பெருமையையுடைய,   நிதிக்கரசர்  -   நிதித்தலைவராகிய தேவர்கள்,
பின்னை  -  பின்புறத்திலும்,   முன் - எதிர்ப்புறத்திலும், எழுந்தார் -
வந்தார்கள், எ-று.                                        (26)

 1037. பன்னகர்கள் பன்மணிக டீவிகைக ளாக
      முன்னமிறை பாதம்பணிந் தேகினார்கண் முறையால்
      வன்னிமுடி வானவர்கள் சென்னிமிசை வைத்த
      பன்னரிய தூபகட மேந்திப்பணிந் தெழுந்தார்.

     (இ-ள்.)   பன்னகர்கள்  -   பவணதேவர்கள்,  பன்மணிகள் -
பலவாகிய இரத்தினங்களை, தீவிகைகளாக - தீவட்டிகளாகக் கொண்டு,
இறை   -   ஸ்வாமியினுடைய,   பாதம்  - திருவடிகளை, பணிந்து -
வணங்கி,  முன்னம்  -  எதிரிலே, முறையால்  - வரிசைக்கிரமத்தால்,
ஏகினர் - சென்றார்கள், வன்னி முடிவானவர்கள்  - அக்னிகுமாரர்கள்,
சென்னிமிசை - சிரசின்மேல்,   வைத்த - வைக்கப்பட்ட, பன்னரிய -
சொல்லுதற்கரிய வாசனையை வீசுகின்ற, தூபகடம் - தூபகலசங்களை,
ஏந்தி   -   தாத்து,   பணிந்து - (சுவாமியை) வணங்கி, எழுந்தார் -
எழுந்துபோனார்கள், எ-று.                                (27)

 1038. இரவிசசி யெண்ணரிய தொக்கனைய விறைவன்
      றிருவுருவி னொளியழகு கண்டுசிறந் தேத்திப்
      பருதிமதி பான்மையுடை மாந்தர்முக மென்னு
      மரவிந்தமுங் குமுதங்களும் மலரவுட னெழுந்தார்.

     (இ-ள்.)    எண்ணரிய   -    எண்ணுதற்கரிதாகிய,   இரவி -
சூர்யர்களும்,   சசி   -   சந்திரர்களும்,  தொக்கனைய - ஒன்றாகக்
கூடினாலொத்த   பிரகாசமுள்ள,    இறைவன்    -   தலைவனாகிய
ஜினேந்திரனுடைய, திரு - அழகிய, உருவின் - பரமௌதாரிக திவ்விய
தேகத்தினுடைய, ஒளி - ஜோதியுள்ள, அழகு - லாவண்யத்தை, கண்டு
- பார்த்து, சிறந்து - சிறப்பையடைந்து, ஏத்தி - ஸ்தோத்திரம் பண்ணி,
பான்மையுடை  -  பவ்வியத்துவம் பொருந்திய, மாந்தர் மனிதர்களின்,
முகமென்னும்   -  வதனமென்கிற,   அரவிந்தமும்   -    தாமரைப்
புஷ்பங்களும்,   குமுதங்களும்   -   அல்லி மலர்களும், பருதிமதி -
ஸ்வாமியினுடைய   சூர்ய   சந்திர  குணமொத்த ஒளிகளால், மலர -
மலர்ச்சியடைய,      உடன்      -      உடனே,     எழுந்தார் -
சந்தோஷித்தெழுந்தார்கள், எ-று.                            (28)

 1039. குடையினொடு கொடிபருதி மின்னின்மிசை குலவ
      வடிவுடைய வைசயந்தை வான்கொடிமுன் னேக
      விடியினொலி யவியவெழி னாந்திமுன் னியம்பப்
      படருவினை யெறியுமரு ளாழியுமுன் னேக.