விருஷபத்தைப்போல, (அதாவது : விருஷபம்போல
கெம்பீரமாகி),
நடந்தார் -
நடைக்கலாயினார்கள், எவரும்
-
வருத்தமுள்ளவர்களெல்லாம், சோகம் - துக்கத்தை,
ஒழிந்தார் -
நீங்கிச் சுகமடைந்தார்கள், செவிடர் -
செவிடர்கள், மொழி -
பிறர்கூறும் வசனத்தை, கேட்டார் -
செவிடு நீங்கி போஸ்ரீரீத்திர
பலத்தால் கேட்டுக் கொள்ளும் தன்மை யடைந்தார்கள்,
குபிதர் -
கோபிகள், கோபம் - குரோதத்தை, ஒழிந்தார் - விட்டார்கள், குருடர்
- அந்தகர்கள், விழி - கண்விழியால் பார்வையை,
பெற்றார் -
அடைந்தார்கள், எ-று. (31)
1042. பிறவியுறு பகையுடைய பணிநகுல முதலா
வுறவியிற வாதவுற வாயவ ணிலத்துக்
கிறைவனிறை காதலொடு மங்கங்கெதிர் கொண்டார்
மறமலி விலாழியுடை மன்னவனை வந்தே.
(இ-ள்.)
பிறவி - ஜன்மத்தினாலேயே, உறு - அடையப்பட்ட,
பகையுடைய - ஜன்மனவர சத்துருத்துவமுடைய, பணி - சர்ப்பம்,
நகுலம் - கீரிப்பிள்ளை, முதலாம்
- முதலாகிய, உறவி -
(ஒன்றுக்கொன்று ஜன்மவைரமாயுள்ள) பிராணிகளும், இறைவன்
-
ஸ்வாமியின்மேல், நிறை - நிறைந்த, காதலொடு
- பக்தியினோடு
(கர்மோப சமமாவதோடு), இறவாத -
நீங்காத, உறவாய் -
மித்திரத்துவமாகி, அவணிலத்து -
ஸ்ரீவிஹாரமாகிற
அவ்வவ்விடங்களில், மறமலிவில் - பாபம் மிகுதலில்லாத, ஆழியுடை
- தர்ம சக்கரத்தையுடைய, மன்னவனை - ஸ்வாமியை, அங்கங்கு -
அவ்வவ்விடங்களிலும், வந்து -
வந்து, எதிர்கொண்டார் -
எதிர்கொண்டார்கள், எ-று. (32)
1043. வெவ்வினைக டீரவிம லன்கமல மேற்கொண்
டிவ்வகை யெழுந்தருளி வந்தவிவை கண்டாங்
கவ்வியமின் மைந்தரை யணைந்துசிலர் சொன்னார்
மௌவன்மலர் தூயவரும் மலரடி பணிந்தார்.
(இ-ள்.) வெவ்வினைகள்
- பொல்லாங்காகிய பாபவினைகள், தீர
- நீங்கும்படி, விமலன் - விமலதீர்த்தங்கரனாகிய ஜினேந்திரன்,
கமலமேற்கொண்டு - தேவநிர்மித செந்தாமரைப் புஷ்பத்தின் மேலேறி,
இவ்வகை - இவ்விதமாக, எழுந்தருளிவந்த- ஸ்ரீ விஹாரமாகிய, இவை
- இவ்வதிசயங்களை, கண்டு, பார்த்து, ஆங்கு - அப்பொழுதே, சிலர்
- சில பேர்கள், ஒளவியமில் - பொறாமையில்லாத நற்குணமுடைய,
மைந்தரை - இம்மேருமந்தரரென்னும் குமாரர்களிடத்தில், அணைந்து
- சேர்ந்து, சொன்னார் - தெரியச் சொன்னார்கள், அவரும் -
அக்குமாரர்களும், மௌவல்மலர் - வனமல்லிகைப் புஷ்பங்களை, தூய்
- சொரிந்து, மலரடி - பகவானுடைய மலர்ப்பாதங்களை, பணிந்தார் -
வணங்கினார்கள், எ-று. (33) |