சமவசரணச்சருக்கம்505


Meru Mandirapuranam
 

கொடிகளைப்  போல்,  சோலைவாய்  - தோப்புகளில், பொலிந்து -
அழகாக,  தோன்றி  -  வந்து  தோன்றி, கயல் -  கெண்டைமஸ்யம்
போன்ற, விழி -  கண்களானவை, பிறழ - சுழலும்படி, காமங்கனிய -
பார்ப்பவர்களுக்கு இச்சை  அதிகரிக்கும் படியாக, நின்று ஆடினார் -
நின்று நர்த்தனம் புரிந்தார்கள், எ-று. (21)

 1069. கற்பக மடநல் லார்கள் காமனைச் செறிவ தேபோற்
      கற்பக மரத்தைக் காம வல்லிகள் செறிந்த காமர்
      விற்பயி லொயிளியைக் கண்டு வேதிகை யென்று மீள்வார்
      தப்புவர் நடையிற் றாழ்வை யொளியினா லுயரமென்னா.

   (இ-ள்.)    கற்பு  -  பதிவிரதா  குணம்  பொருந்திய,  அகம் -
மனத்தை  உடைய,  மட    நல்லார்கள்  -  இளமையுள்ள  அழகிய
ஸ்த்ரீமார்கள்,  காமனை -  இச்சையைச் செய்யும் தங்கள் புருஷனை,
செறிவதே  போல்  -  சேர்ந்து  மனமொத்திருப்பது  போல, கற்பக
மரத்தை   -      கற்பக      விருட்சங்களை,    காமவல்லிகள் -
காமவல்லிக்கொடிகள்,    செறிந்த  -   சேர்ந்திராநின்றன,  (மற்றும்
அவ்வனபூமியில்),  காமர் - அழகிய, வில் - கிரணத்தினால், பயில் -
மிகுதியாகி ஸ்தம்பித்திராநின்ற,  ஒளியை - ஜோதித்திரளை, கண்டு -
பார்த்து,  வேதிகையென்று -  மதிலென்று,   மீள்வார் -   (அங்கே
சென்றவர்கள்)   திரும்புவார்கள்,  தாழ்வை - பள்ளமாகிய தலத்தை,
ஒளியினால் -  பிரகாசத்தினால்,  உயரமென்னா  -  இது   மேடான
பூமியென்று கருதி, நடையில் - அடி பெயர்த்து நடப்பதில், தப்புவர் -
தவறிப் பிரமிப்பார்கள், எ-று. (22)

 1070. மதுகரந் தும்பி வண்டுவண்சிறைப் பறவை மற்றும்
     பொதியவிழ் போதின் மீது போர்த்தன புகழ லாற்றா
     மதியொளி பரந்த பூமி விதியுளி கிடந்த வல்லிப்
     பொதுளிய போதின் மீது போர்த்தகண் வாங்க லாற்றா.

   (இ-ள்.)  மதியொளி -  சந்திரகிரணம்போல, பரந்த - விசாலித்த,
பூமி - அவ்வன பூமியில், விதியுளி - கிரமத்தையுடையதாய், கிடந்த -
சேர்ந்திராநின்ற,  பொதியவிழ் -  முறுக்கவிழ்ந்து  மலர்ந்திரா நின்ற,
போதின்  மீது -  புஷ்பங்களின்  மேல், மதுகரம் - தேனினங்களும்,
தும்பி -  தும்பிக்கூட்டங்களும்,  வண்டு  - வண்டினங்களும், வண் -
வளப்பமாகிய,  சிறை  -  இறகுகளையுடைய,  பறவை - பக்ஷிகளும்,
மற்றும் -   மற்ற   ஞிமிறின   முதலானவைகளும்,    போர்த்தன -
நிறைந்திரா  நின்றன,   புகழல்  - அதைப் புகழ்ச்சியாக வர்ணிப்பது,
ஆற்றா - முடியாது,  (மேலும்), வல்லி - காமவல்லியாதிக்கொடிகளில்,
பொதுளிய -  நெருங்கிமலர்ந்த,  போதின்  மீது - பூக்களின் மேலே,
போர்த்த - பார்க்கப்பெற்ற,  கண் - கண்களை,  வாங்கல் - திருப்பி
வாங்குதல், ஆற்றா - முடியாது, எ-று. (23)

1070.(அ) வனமிது விதியி னெய்தி வாவியைச் சார்ந்து மைந்த
       ரினமல ரேந்திச் சொன்ன வெட்டெட்டு மரத்தி னான்கு
       சினைதொறுஞ் செறிந்த சீய வணைமிசைத் தேவர் கோம
       னனையபொற் படிமைத் தூபை யருச்சித்துப் பிரிதி சேர்ந்தார்.

   (இ-ள்.) விதியின் - கிரம  வரிசையையுடைய, வனம் இது - இந்த
வன  பூமியை,  மைந்தர் -  மேருமந்தர  குமாரரிருவரும்,   எய்தி -
அடைந்து,  வாவியை  -  தடாகங்களை,  சார்ந்து  -   வரிசைப்படி
யடைந்து,  இனமலர்  -  நல்ல  இனங்களான புஷ்பங்களை, ஏந்தி -
தரித்து, சொன்ன - அவ்வன பூமியில் சொல்லப்பட்ட,