எட்டெட்டுமரத்தின் -
எட்டு எட்டாகிய மரங்களில் (அதாவது :
கற்பாக விருக்ஷம் எட்டு
சைத்ய விருக்ஷம்
எட்டாக
இராநின்றவைகளில்), நான்கு
சினை தொறும் -
சைத்ய
விருக்ஷங்களினுடைய நாலு கிளைகள் தோறும், செறிந்த -
சேர்ந்திரா
நின்ற, சீயவணை மிசை - ஸிம்மாசனத்தின் மேலே யிராநின்ற,
தேவர்
கோமானனைய - ஜினேந்திரனுக்
கொப்பாகிய, பொன் -
பொன்னாலாகிய, படிமை - ஜினப்பிரதிமைகளையும்,
தூபை -
ஸ்தூபைகளிலுள்ள ஜின பிம்பங்களையும், அருச்சித்து -
அர்ச்சனை
செய்து, பிரிதி சேர்ந்தார் - (அவ்வன பூமியின்
எல்லைப் பிரமாண
முடிவில் அப்பியந்தர பாகத்திலுள்ள)
பிரிதிதரமென்னும் மதிலை
யடைந்தார்கள்,
எ-று. (23-அ)
1071. இருநிதி யிருந்த சென்னி யிமையம்வந் திறைவன் பாதம்
மருவிய தென்னச் செம்பொன் மயமதாய் வெள்ளி சூடி
யுருமலி யுதயத் திற்கு மிருமடி யாகும் பிரிதி
தரமெனு மிஞ்சி யைந்து நிலையவட் டாலைத் தாகும்.
(இ-ள்.)
இருநிதி - சங்க நிதி பத்மநிதித்தலைவர்களாகிய
தேவர்கள், இருந்த - தங்கியிராநின்ற, சென்னி - சிகரத்தையுடைய,
இமையம் - ஹிமவான் பர்வதமானது, வந்து - இவ்விடத்தில் வந்து,
இறைவன் பாதம் - ஜினேந்திரனுடைய ப ாதத்தை, மருவியதென்ன -
சேர்ந்ததை யொப்ப, செம்பொன் மயமதாய் - சிவந்த ஸ்வர்ணமயமாகி,
வெள்ளி சூடி - வெள்ளியாலாகிய
தலைச்சூட்டையுடையதாகி,
உருமலி - ரூபத்தினால் நிறைந்த, உதயத்திற்கும் -
உதயதரமென்னும்
மதிலுக்கும், இருமடியாகும்
- இரட்டித்த
உன்னதமும்
அகலமுமுள்ளதாகும், பிரிதிதரமெனும் இஞ்சி
- ப்ரீதிதரமென்னும்
மதிலானது, ஐந்து நிலைய - ஐந்து நிலைகளை யுடையவைகளாகிய,
அட்டாலைத்தாகும் - அட்டாலயங்களையுடையதாகும், எ-று. (24)
1072. கொடிமிடைக் கோபு ரங்க ளோங்கின நான்கு காத
மிடிமுர சியம்ப வானோ ரியற்றுமஞ் சிறப்பை யெய்தும்
படிமைக ளிருந்த பஞ்ச நிலங்களை யுடைய பைம்பொற்
குடமுகம் பதுமந் தேமாங் கொத்தன கோணந் தானே.
(இ-ள்.) கோணந்தான்
- மூலைகளிலெங்கும், கொடி -
துவஜக்கொடிகளால், மிடை - நெருங்கி அழகுடைய, கோபுரங்கள் -
ப்ரீதிதர மென்னும் கோபுரங்கள் நாலும், நான்குகாதம் -
நாலுகாதம்,
ஓங்கின - உன்னதமாயின, இடி - இடிப்போல கர்ஜிக்கின்ற,
முரசு -
பேரிகைகள், இயம்ப - சப்திக்க, வானோர் - தேவர்கள், இயற்றும் -
செய்கின்ற, அம் - அழகிய, சிறப்பை -
பூைஜையை, எய்தும் -
அடைகின்ற, படிமைகள் - ஜினப்ரதிமைகள், இருந்த - இராநின்ற,
பஞ்ச நிலங்களையுடைய,
ஐந்து நிலைகளையுடையதாகிய,
(சிகரத்திலே), பைம்பொன் - பசுமை பொருந்திய
பொன்னாலாகிய,
குடம் - கடமும், முகம் - அக்கடத்தின்
முகமும், பதுமம் -
பொன்னாலாகிய தாமரை
புஷ்பமும் தேமாங்கொத்தன -
அப்பதுமமலரின் அடியில் அழகிய மாவிலைக் கொத்துமுடையனவாய்
விளங்கும், எ-று. (25)
1073. கோபுரத் திரு மருங்குங் குடவரை யனைய தோளார்
பாகரப் பிரபை போலப் படரொளிப் பவண வேந்தர்
நாகருக் கிறைவர் கோமா னலம்புகழ்ந் தலங்க லார்ந்த
வேதிரம் பிடித்துக் காக்கும் புரத்துளார் கொடியின் வீதி.
|