(இ-ள்.)
கோபுரத்து - அக்கோபுரத் துவாரத்தின், இருமருங்கும்
- இரண்டு பக்கத்திலும்,
குடவரையனைய - அஸ்தங்கிரி
பர்வதத்திற்குச் சமானமாகிய, தோளார் - புஜத்தையுடையவர்களாகிய,
பாகரப்பிரபை போல - சூர்யப்
பிரபைப்போல, படரொளி -
மிகுதியான ஒளியை வீசுகின்ற,
பவண வேந்தர் - பவண
தேவர்களுக்கு அதிபதியாகிய,
வைரோசன
ரென்கிற
பவணேந்திரர்கள், நாகருக்கு இறைவர் - தேவேந்திரர்களுக்கெல்லாம்,
கோமான் - நாதனாகிய ஜீனேந்திரனுடைய,
நலம் - அழகிய
குணாதிசயங்களை, புகழ்ந்து
- துதித்துக்
கட்டியஞ்
சொல்லிக்கொண்டு, அலங்கலார்ந்த
- மாலைகளால்
அலங்கரித்திராநின்ற, வேதிரம்
- பிரம்பை, பிடித்து -
பிடித்துக்கொண்டு, காக்கும் -
காவல் செய்கின்ற, புரத்து -
அக்கோபுரத்து, உள் - அப்பியந்தரத்தில், ஆர் - நிறைந்திராநின்ற,
கொடியின் - துவஜங்களையுடைய, (துவஜ
பூமியாகிய ஐந்தாம்
பிராகாரத்தின்), வீதி - மஹாவீதிகளாகும், எ-று. (26)
1074. ஐந்துவிற் சதுர மாகி யாயிரத் தெண்ப தாய
பந்தியின் வருக்க மாய மண்டலம் பத்தின் பாக
மிங்கிவை திரட்டி யேக திக்கினுக் காமி வற்றை
மங்கலந் தன்னின் மாற வந்தவப் பந்தின் மீது.
(இ-ள்.)
ஐந்தாம் பிரகாரமாகிய வப்பூமியில்
மஹா வீதி
போகக் கோணங்கள் நாலில் ஒவ்வொரு
கோணத்திலும்), ஐந்துவிற்
சதுரமாகி - ஐந்துவில் சதுரத் தோடு கூடி, ஆயிரத் தெண்பதாய -
ஆயிரத்தெண்பதாகிய, பந்தியின் வருக்கமாய - (ஆயிரத்தெண்பது
ஆயிரத்தெண்பது) பந்தி வரிசைகளையுடைய,
மண்டலம் -
மேடைகள், பத்தின்பாகம் -
பத்தில் பாதியாகிய ஐந்துவில்
உன்னதமாம், இங்கிவை - இங்கு இந்த
மேடைகளை, திரட்டி -
மொத்தக் கணக்காகச் சேர்க்க,
(வந்த சங்கியைகளாகிய,
பதினொருலக்ஷத்து அறுபத்தாறாயிரத்து
நானூறு மேடைகள்),
ஏகதிக்கினுக்கு - ஒரு கோணமாகிய பூமியில்,
ஆம் - ஆகும்,
இவற்றை - இத்தொகையை, மங்கலந்தன்னில் - முக்கிய
மங்கலத்தின்
தொகையாகிய நாலினால், மாற - பெருக்க,
வந்த - வரப்பட்ட
சங்கியைகளாகிய, அப்பந்தின் மீது - அந்நாலு
கோணத்திலுமாகிய
திரண்ட கணக்காகிய, நாற்பத்தாறு லக்ஷத்து
அறுபத்தையாயிரத்து
அறுநூறாகிய மேடைகளின்மேல், எ-று.
இதுவும் அடுத்த
செய்யுளும் குளகம். (27)
1075. மூன்றுவிற் சதுர மாகி முழுமணிப் பீடத் துச்சி
யூன்றிவில் லிரண்டு சுற்றா யுயர்ந்திரு காதம் பைம்பொ
னீன்றவே போன்று கண்ணி னெழின்மணியிருந்த தண்டி
னான்றபா லிகையி னுச்சிப் பலகைமேற் பதாகை யாமே.
|