(இ-ள்.)
மூன்றுவில் சதுரமாகி -
மூன்றுவில் சதுரத்தை
யுடையதாகி, முழுமணி - முதிர்ந்த குணமுடைய ரத்தினத்தாலாகிய,
பீடத்து - பீடத்தினுடைய, உச்சி - மேலே, ஊன்றி - நடப்பட்டதாகி,
வில்லிரண்டு சுற்றாய் - இரண்டுவில் சுற்றளவுள்ளதாய், இருகாதம் -
இரண்டுகாதம், உயர்ந்து - உன்னதமாகி,
பைம்பொன் - பசுமை
பொருந்திய பொன்னினாலே, ஈன்றவேபோன்று
- உற்பத்தி
செய்யப்பட்டவை போல, கண்ணின் -
பார்க்கப்பட்டவர்களுடைய
கண்களிலுள்ள, எழில் - அழகுபிரகாசியா
நின்ற, மணி -
கண்மணிகள், இருந்த - தங்கிய,
(அதாவது : பார்த்தகண்கள்
வேறொன்றிற் செல்லாத வழகுடைய),
தண்டின் - ஸ்தம்பத்தின்
தலையிலே, ஆன்ற - பெரிதாகிய, பாலிகையின் - பாலிகையினுடைய,
உச்சி - உச்சியிலே, பலகை மேல் - அமைக்கப்பட்ட
பலகையின்
மேல், பதாகை - துவஜக் கொடிகள், ஆம் - ஆகும், எ-று. (28)
1076. சிங்கமா லியானை மாலை சிகியன்னங் கருட னேறு
பங்கய மகர மாழிப் பதிகளாம் பதாகை பத்தும்
பொங்கியா காய மென்னும் புணரிவெண் டிரைகள் போலும்
மங்கலக் கிழவன் கோயில் மதிலைச்சூழ்ந் தாடு நின்றே.
(இ-ள்.)
சிங்கம் - சிங்கமும், மால் - பெரிதாகிய, யானை -
யானையும், மாலை - பூமாலையும், சிகி -
மயிலும், அன்னம் -
ஹம்ஸமும், கருடன் - கருடனும், ஏறு - விருஷபமும், பங்கயம் -
தாமரை புஷ்பமும், மகரம் - மகர மஸ்யமும், ஆழி - சக்கரமும்,
(ஆகிய இவைகள்), பதிகளாம் - லாஞ்சனமாகவுடைய, பதாகை
பத்தும் - இந்த தசவிதமான
துவஜங்களும், (ஒவ்வொரு
ஸ்தம்பங்களின் பலகையின் மேலும்),
பொங்கி - பெரிதாகி,
ஆகாயமென்னும் - ஆகாசமென்கின்ற, புணரி -
ஸமுத்திரத்திற்கு,
வெண் - வெளுப்பாகிய, திரைகள் போலும் - அலைகளைப்போலும்,
மங்கலக்கிழவன் -
பிரதமமங்கலத்திற்கு
முக்கியனான
ஜினேந்திரனுடைய, கோயில் - ஸமவ
ஸரணத்தில், மதிலை -
இனிச்சொல்லப்படும் கல்யாண தரமென்னும்
மதிலை, சூழ்ந்து -
பரிவேஷ்டித்து, நின்று - நிலைபெற்று,
ஆடும் - அசைவனவாம்,
எ-று. (29)
1077. முடிமணி முத்த மாலை நான்றுகிண் கிணிகள் மொய்த்த
கொடிநிரை கோடி நான்கோ டறுபத்தா றிலக்கங் கோமா
னுடையன வைம்பத் தாறா யிரமுன்றி லுலாவு கின்ற
படியிது காத மூன்றாய்ப் பயோதிபோற் சூழ்ந்த தாமே.
(இ-ள்.) முடி - அந்த
த்வஜஸ்தம்பங்களினது சிகரத்தினின்றும்,
முத்தம் - முத்துமணிகளாலாகிய, மாலை - மாலைகள், நான்று -
தொங்கி, கிண்கிணிகள் - சிறுசதங்கைகள், மொய்த்த - நெருங்கிய,
கொடி நிரை - த்வஜ ஸமூகங்கள்,
கோடி நான்கோடு -
நாலுகோடியோடு, அறுபத்தாறிலக்கம் - அறுபத்தாறுலக்ஷத்து,
|