ஐம்பத்தாறாயிரம்
- ஐம்பத்தாறாயிரம்,
கோமானுடையன -
ஸ்வாமியினுடையனவாய், முன்றில் - அழகிய ஐந்தாம்
பிரகாரமாகிய
முற்றத்தில், உலாவுகின்ற - அசையா நின்றன, படியிது - இந்த
த்வஜ
பூமியானது, காதமூன்றாய் - மூன்று
காதமகல முடையதாகி,
பயோதிபோல் - ஸமுத்திரம்
போல, சூழ்ந்ததாம் -
சூழ்ந்திராநின்றதாகும், எ-று. (30)
1078. பலமணி பயின்ற பத்தி பித்திநற் படிகம் பைம்பொன்
னிலைகளைந் தாகி நின்ற நாடக சாலை தோறும்
முலையும்மே கலையும் முத்த மாலையும் குலாவ மின்போற்
பலநடம் பயிலும் மாதர் பவணர்தம் பவழ வாயார்.
(இ-ள்.)
பல - பலவாகிய, மணி - இரத்தினங்களால்,பயின்ற -
செய்யப்பட்ட, பத்தி - பந்தி வரிசைகளையுடைய, பித்தி - சுவர்கள்,
நல் - நன்மையாகிய, படிகம் - ஸ்படிகத்தினாலும், பைம் - பசுமை
பொருந்திய, பொன் - பொன்னாலும், நிலைகள் - நிலைகளானவை,
ஐந்து - ஐந்தாகவும், ஆகி
நின்ற - ஆகியிரா
நின்ற,
நாடகசாலைதோறும் - இந்த
துவஜ பூமி வீதியில்
இரண்டு
பக்கத்திலுமுள்ள நர்த்தன சாலைகளில், முலையும் -
ஸ்தனங்களும்,
மேகலையும் - மேகலா பரணங்களும், முத்தமாலையும் -
முத்து
மாலைகளும், மின்போல் - மின்னலைப்போல, குலாவ - பிரகாசிக்க,
பல - பலவாகிய, நடம் - நர்த்தனங்களை, பயிலும் - செய்யாநின்ற,
பவணர்தம் - பவண தேவர்களுடைய, மாதர் - ஸ்த்ரீயர்களாகிய,
பவழவாயார் பவளக்கொடிபோல்
சிவந்த வாயையுடைய
நர்த்தகிகளாவர், எ-று. (31)
1079. புழைக்கைமா வீட்ட மோளி யாளானம் புணர்ந்தவற்றின்
தழைச்செவி போல வாடும் பதாகையாந் தரணி தன்னை
மழைக்கைமா வேந்தர் வந்து மங்கல மரபி னெய்திக்
குழைத்தெழும் பொழிலைச் சூழ்கல் யாணகோ புரத்தைச் சார்ந்தார்.
(இ-ள்.) புழைக்கை - துவாரம் பொருந்திய துதிக்கையையுடைய,
மாவீட்டம் - யானை சமூகங்களானவை,
ஒளி - ஒழுங்காகிய,
ஆளானம் - கட்டுத்தறிகளை, புணர்ந்து - வரிசை
வரிசையாகச் சேர,
(அவ்விடத்தில் ஆடுகின்ற), அவற்றின் - அவ்வியானைகளின், தழை
- விசாலித்த, செவிபோல - காதுகள்போல, ஆடும்
- அசைகின்ற,
பதாகையாம் - துவஜக் கொடிகளையுடைய, தரணிதன்னை -
துவஜ
பூமியை, மழை - மேகத்தைப்போன்ற
(அதாவது : மேகமானது
மழையைச் சொரிவதுபோல தியாகம்
கொடுக்கும்படியான), கை -
கைகளையுடைய, மா - பெருமை
பொருந்திய, வேந்தர் -
மேருமந்தரரென்கிற வரசகுமாரர்கள், மங்கலம்
- மங்கலமாக
(அதாவது :
தங்களுக்கு
பாபவிநாசமாகவும்
புண்ணியலாபமாகும்படியாகவும்), மரபின் -
கிரமத்தினால், எய்தி -
அடைந்து, (அதனப்பியந்தரத்திலிரா நின்ற), குழைத்து
- தளிர்த்து,
எழும் - உயர்ந்திராநின்ற, பொழிலை - கற்பக
|