(இ-ள்.) கனை - சப்தியாநின்ற, கழல் - வீரகண்டயத்தை
அணிந்த, அரச - வைஜயந்த மஹாராஜனே!. (இன்னும்), வினை -
ஞானவரணாதி அஷ்டகருமங்கள், அற - முழுமையும் நீங்க,
விட்டபோழ்தின் - ஆத்மனை விட்டு நீங்கினகாலத்தில், வெடித்த -
வெடித்துநீங்கிய, எரண்டம்போல - ஆமணக்கங்கொட்டையைப்
போல, நினைவரும் - நினைத்தற்கரிய, குணங்களெட்டும் - அனந்த
ஞானாதி அஷ்ட குணங்களும், நிறைந்து - சம்பூர்ணமாகி,
மேனோக்கி - ஊர்த்துவகதி ஸ்வபாவமாகி, ஓடி - சென்று, முனிவரும்
- முனீஸ்வரர்களும், உலக மூன்றும் - மூன்றுலகத்திலுள்ள
ஞானிகளும், இறைஞ்ச - வணங்க, மூவுலகினுச்சி -
மூன்றுலோகத்துக்கும் உச்சியாகிய தனுவாதாக்கிரத்தில், நிற்றல் -
நிலையாயிருக்குந்தன்மை, கைவலமாகும் - கைவல்லியமாகிய
திரவியமோட்சமாகும், எ-று.
கண்டாய் - வினாவொடுசாராத ஒருவகை அசை. (106)
107. உரைத்தவிப் பொருளின் மெய்ம்மை யுணர்வது நல்ல ஞானம்
புரைப்பறத் தெளிதல் காட்சி பொருந்திய விரண்டு மொன்றிற்
றரித்தனல் லொழுக்க மாகுஞ் சாற்றிய மூன்று மொன்றின்
விரைபொலி தாரோய் வீட்டின் மெய்ந்நெறி யாவ தாமே.
(இ-ள்.) விரை - வாசனையுள்ள, பொலி - அழகு, விளங்குகிற,
தாரோய் - மாலையை யணிந்திராநின்ற வைஜயந்த மஹாராஜனே!,
உரைத்த - சொல்லப்பட்ட, இப்பொருளின் - இந்தசீவாதி
பதார்த்தங்களினது, மெய்ம்மை - உண்மையை, உணர்வது - அறிவது,
நல்லஞானம் - ஸம்மியக்ஞானமாம், புரைப்பற - சந்தேகமின்றி,
தெளிதல் - தெளிவது, காட்சி - ஸம்மியக்தர்சனமாகும், பொருந்திய -
சேர்ந்திராநின்ற, இரண்டும் - இந்த சம்மியக்ஞான தர்சனங்க
ளிரண்டையும், ஒன்றிற்றரித்தல் - ஒரு தன்மையிற் கொண்டு
அனுஷ்டித்தல், நல்லொழுக்கமாகும் - சம்மியக் சாரித்திரமாகும்,
சாற்றிய - சொல்லப்பட்ட, மூன்றும் - (ஸம்மியக்தர்சன, ஞான,
சாரித்திர மென்னும் இந்த) இரத்னத்திரயங்கள், ஒன்றின் -
ஆத்மனிடத்தில் பொருந்துமேயாகில், வீட்டின் - மோட்சத்திற்கு,
மெய் - உண்மையாகிய, நெறி - மார்க்கம், ஆவதாம் -
உண்டாவதாம், எ-று.
‘அறிவு காட்சியதா? என்ற 69-வது பாடல் முதல்
‘உரைத்தவிப்பொருளின் மெய்ம்மை? என்னும் இந்த 107-வது பாடல்
வரையில், நவபதார்த்தஸ்வரூபமும், மோட்சமார்க்கமும் சுருக்கமாகச்
சொல்லப்பட்டிருக்கின்றன.
இன்னும் இவற்றை விரிவாகத்
தெரியவேண்டின் பதார்த்தசார
கிரந்தத்தில் பார்த்துக்கொள்க. இன்னும்
ப்ராப்ரதத்திரயத்திலும்,
சர்வார்த்த ஸித்தியிலும், கோமடஸாரத்திலும்
இவை விரித்துச்
சொல்லப்பட்டிருக்கின்றன. அவைகளிலும் இவற்றின்
விவரங்களைப்
பார்த்துக் கொள்ளலாம். (107)
|