510மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

விருட்ச  பூமியை,  சூழ்  -  சூழ்ந்ததாகிய, கல்யாண கோபுரத்தை -
கல்லியாணதரமென்கிற   கோபுரத்தையும்  மதிலையும்,  சார்ந்தார் -
அடைந்தார்கள், எ-று. (32)

 1080. முதனடு விறுதி கோச மூன்றரை யரைய கன்றிட்
     டுதயத்தின் முத்தி யோங்கித் தமனியத் தியன்று நானா
     விதமணி யணிந்து சென்னி மிடைந்தவெண் கொடிய தாகி
     மதிலின் தகத்தட் டாலை மலிந்தவேழ் நிலத்த தாமே.

   (இ-ள்.)   (அந்தக்  கல்யாணதரமென்கிற  மதிலானது), முதல் -
அடியில், கோசமூன்று - மூன்று குரோசமு, நடு - மத்தியில், அரை -
அம்மூன்றில் பாதியாகிய  ஒன்றரைக் குரோசமும், இறுதி - கடையில்
(அதாவது : தலைப்பில்),  அரை - ஒன்றரையில் பாதியாகிய முக்கால்
குரோசமும்,   அகன்றிட்டு  -   அகலமுடையதாகி,   உதயத்தின் -
உதயதரமதிலினுடைய   உன்னதத்திற்கு,   முத்தியோங்கி  -  மூன்று
பங்காகிய  உன்னதமுடையதாகி,   தமனியத்து  -  ஸ்வர்ணத்தினால்,
இயன்று -   செய்யப்பட்டதாகி,    நானாவிதமணி   -  பலவிதமான
ரத்தினங்களினால்,    அணிந்து   அலங்கரித்துச்   செய்த   தலைச்
சூட்டையுடையதாகி,   சென்னி - தலையிலே, மிடைந்த - நெருங்கிய,
வெண்     -         வெளுப்பாகிய,          கொடியதாகி    -
துவஜக்கொடிகளையுடையதாகி,     மதிலினதகத்து   -    கல்யாண
தரமென்கிற அம்மதிலினுள்,   அட்டாலை - அட்டாலையங்களினால்,
மலிந்த       -      நிறைந்த,        ஏழ்     நிலத்ததாம்    -
ஏழ்நிலவட்டாலையங்களுடையதாகும், எ-று. (33)

 1081. பத்தரைக் காத மோங்கிப் பைம்பொற்கோ புரங்க ணான்கு
     முத்தமத் துறக்க மேழை யொத்தவேழ் நிலத்த வாகிப்
     பத்துநா மத்த வாமேழ் பவத்தொடர் பதனைக் காட்ட
     வைத்தகண் ணாடி வாய்தல் மருங்கிரண் டுடைய தாமே.

   (இ-ள்.)  பைம் - பசுமை பொருந்திய, பொன் - பொன்னாலாகிய,
கோபுரங்கள்  நான்கும்  - கல்யாணதரமென்கிற கோபுரங்கள் நாலும்,
உத்தமம் -   மேலான,  துறக்கமேழை - ஏழுதேவருலகத்தை, ஒத்த -
நிகர்த்த,     ஏழ்நிலத்தவாகி  -   ஏழு   நிலைகளையுடையனவாகி,
பத்தரைக்காதம் - ஐந்து காதம், ஓங்கி - உயர்ந்து, பத்து நாமத்தவாம்
- பாகியபரிக்கிரம்  பத்தின்மேலாகிய  ராகத்தினாலாகும்,  வாய்தல் -
அக்கோபுரவாசற்படியானது,   இரண்டு    மருங்கும்   -   இரண்டு
பக்கங்களிலும்,      ஏழ்பவத்      தொடர்பதனை     -     முன்
ஏழ்பவத்தொடர்ச்சிகளை,    காட்ட    - பார்க்கப்பட்டவர்களுக்குக்
காட்டும்படி,   வைத்த   -    ஸ்தாபிக்கப்பட்ட,     கண்ணாடி  -
கண்ணாடிகளை, உடையதாமே - உடைத்தாகியதாம், எ-று. (34)

 1082. உரைத்தநா மத்த வாய புறத்தகத் துதயம் போலப்
     பெருத்தகோ புரங்க ணான்கு பெருவிலை மணிய மாலை