தரத்தினாற் பருத்துத் தாழ்ந்து சணசண
வென்னுங் கண்டை
பரித்துநாற் றிசையும் வீதி பருதிபோ லொளிரு நின்றே.
(இ-ள்.)
உரைத்த - இப்போது சொல்லப்பட்ட, நாமத்தவாய -
கல்யாணதரமென்கிற பெயரை
யுடைனவாகிய, பெருத்த -
பெரியனவாகிய, நான்கு கோபுரங்கள் -
சதுர் கோபுரங்களிலும்,
புறத்தகத்து - உட்புறத்தில், உதயம்போல
- சூர்யோதயம் போல,
பெரு விலை - பெரிதாகிய விலை
மதிப்பையுடைய, மணி -
இரத்தினத்தினாலாகிய, அம் - அழகிய,
மாலை - சங்கிலி
மாலைகளானவை, தரத்தினால் - மேலான வேலைத் தரத்தினால்,
பருத்து - திரண்டு, தாழ்ந்து . தொங்கப்பட்டதாகி, சணசண
வென்னும்
- சணச்சணவென்று சப்திக்கும்படியான, கண்டை - சேமங்கலமானது
(அதாவது : ஜெயமங்களத்வனியையுடைய
வாத்தியமானது),
நாற்றிசையும் வீதி - நாலு திசையிலுமுள்ள மஹா வீதிகளில், பரித்து -
ஆர்ப்பரித்து, பருதி போல் - சூர்ய பிம்பம்போல,
நின்றொளிரும் -
நிலை பெற்றுப் பிரகாசிக்கும், எ-று. (35)
1083. உரைத்தகோ புரத்து வாய்தல் காப்பவ ருலக பாலர்
நிரைத்தவேழ் நிலத்த தாய நாடக சாலை யின்கட்
டரத்தினா னிரைத்த மின்னிற் றானடம் புரியு மாதர்
விரித்தநா முரைத்த தேவர் மேவுமா தேவி மாரே.
(இ-ள்.)
உரைத்த -
சொல்லப்பட்ட,
கோபுரத்து - இக்கல்யாணதரகோபுரத்தினுடைய,
வாய்தல் -
வாசற்படிகளினிருபக்கத்திலும், காப்பவர்
- காவல் செய்கின்ற
த்வாரபாலகர்கள், உலகபாலர்
- லோகபாலகதேவரென்று
சொல்லப்பட்ட கல்பவாஸி
தேவர்களாவர், நிரைத்த -
(அக்கோபுரத்தின் அப்பியந்தரத்தில்
கற்பக விருட்சபூமியின்
வீதிகளிலிருபக்கங்களிலும்) வரிசை பெற்றிராநின்ற,
ஏழ்நிலத்தாய -
ஏழு நிலைகளையுடையதாகிய, நாடகசாலையின்
கண் -
நர்த்தனசாலையில், தரத்தினால் - மேலான தன்மையால், நிரைத்த -
வரிசையாகிய, மின்னின் - மின்னலைப்போல, நடம்புரியும்
மாதர் -
நடனஞ் செய்கின்ற ஸ்திரீகள்,
நாம் - நாம், விரித்துரைத்த -
இப்பொழுது விரித்துச் சொல்லிய, தேவர் - லோகபாலகதேவர்கள்,
மேவும் - பொருந்திச் சேர்கின்ற, மா
- பெருமை பொருந்திய,
தேவிமார் - தேவிமார்களாவர், எ-று. (36) 1084. வடிவுடைப் பீடத் திப்பால் மணித்திரள் மலர்ந்த நான்கு
விடவங்கண் மிக்க திக்கை யளப்பன போன்று சித்தப்
படிமைக ளிருந்த சித்த பாதவம் பயின்ற போதுங்
குடையின்மீ தணிந்து வீதி நான்கினுங் குலாவு மிப்பால்.
|