பத்திரை - (தக்ஷிணதிசையில்)
பத்திரை யென்றும், சயந்தை -
(அபரதிசையில்) ஜயந்தை யென்றும், பூரம்
- (உத்திரதிசையில்)
பூர்ணை யென்றும், நாமத்த - பெயரையுடையனவாகிய,
வாவி -
தடாகங்களாகும், நான்கில் -- அந்நான்கு
தடாகங்களில், வாரியைத்
தெளித்தபோழ்தின் - முதல்
தடாக ஜலத்தை மேலே
தெளித்துக்கொண்டபோது, (அவ்வாறு தெளித்துக்கொண்டவர்கள்),
முந்தைய பிறப்பை - பூர்வ ஜன்மத்தை,
ஓர்வார் - அறிவார்கள்,
முன்பின் ஏழ்பவத்தைக் காண்பார்
- (இரண்டாவது தடாக ஜல
ஸம்பர்க்கத்தால்) முன் பின்னாகிய ஏழ்பவ
ஜாதியைத்தெரிந்து :
கொள்ளுவார்கள், பார்க்க - மூன்றாந்தடாகோதகத்தைப்
பார்த்த
மாத்திரத்தில், சிந்தை செய்தவற்றை - நினைத்தவற்றை யெல்லாம்,
காண்பார் - பிரத்தியக்ஷமாகத் தோன்றக்
காண்பார்கள், தெளிக்க -
(நாலாந்தடாக நீரைத்) தெளித்துக்கொள்ள, நோய்யாவும்
- சகல
வியாதிகளும், தீரும் - நீங்கும், எ-று.
‘காண்பார்? என்பது இரண்டிடங்களினுங்
கூட்டப்பட்டது. (39)
1087. வாசநின் றறாத சோலை மதிலின் தகத்து மாண்ட
வோசனை யகன்ற தேனு முலகெலா மடங்கி னாலு
மாசைபோ லகன்று தோன்று மருமணி நிலத்த தாகி
மாசிலா மணியி னாய மரங்களாற் செறிந்த தெங்கும்.
(இ-ள்.)
மதிலினது - கல்யாணதர மதிலினுடைய,
அகத்து -
அப்பியந்தர பாகத்தில், வாசம்
- பரிமளமானது, நின்று -
நிலைபெற்று, அறாத - நீங்காத, மாண்ட - மாட்சிமையுடைய, சோலை
- கற்பகச் சோலையாகிய ஆறாம்
பிராகாரமானது, ஓசனை
யகன்றதேனும் - நாலுகாத
விஸ்தீர்ணமுடையதா யிருந்தும்,
உலகெலாம் - இந்தத் திரிலோகத்தும் பவ்வியத்துவமுள்ள
தேவர்
மனிதர் விலங்குகள் எல்லாம் வந்து, அடங்கினாலும் - சேர்ந்தாலும்,
ஆசைபோல் - ஆசையைப்போல, அகன்று - விசாலித்து,
தோன்றும்
- தோன்றுகின்ற, அரும் - அரிய, மணி -
இரத்தினங்களாலாகிய,
நிலத்ததாகி - பூமியையுடையதாகி, எங்கும் - எவ்விடங்களிலும்,
மாசிலா - குற்றமில்லாத, மணியின் - இரத்தினங்களினால், ஆய -
ஆகிய, மரங்களால் - விருட்சங்களால்,
செறிந்தது - நிறைந்தது,
எ-று. (40)
1088. பலநிறம் பயின்ற போதும் பலங்களுஞ் செறிந்த சாகை
நிலைதளர்ந் தொசியக் காணா நிறையவஞ் சிறைகளீண்டி
மலர்நிறைந் திருந்த மட்டை வாங்கினாற் றாங்கப் பாரா
மிலையெனா மிலாத வர்க்கு விருந்தெழுந் துண்ட தேனை.
(இ-ள்.) (அம்மரங்களில்),
பல - பலவாகிய, நிறம்
-
வர்ணங்களை, பயின்ற - உடைத்தாகிய, போதும் - புஷ்பங்களும்,
பலங்களும் - பழங்கள்
|