காய்களும், செறிந்த
- நிறைந்த, சாகை - கிளைகள், நிலை -
நிலையில்லாமல், தளர்ந்து - தாழ்ந்து, ஒசிய - வளைய, காணா -
பார்த்து, அம் - அழகிய, சிறைகள் - வண்டுகள், நிறைய - முழுதும்,
ஈண்டி - நெருங்கி, மலர் - புஷ்பங்களில், நிறைந்திருந்த - நிறைவு
பெற்றிருந்த, மட்டை - மதுவை, வாங்கினால்
- நாம் உண்டு
விடுவோமேயானால், தாங்கப்பாராம் -
கிளைகள் தாங்குதலைப்
பார்க்கமாட்டோம், (என்று எண்ணி) இருந்து -
அப்பூக்களின் மீது
உட்கார்ந்து, தேனை - மதுவை, உண்ட
- பருகின, எழுந்து -
கிளம்பி, (அக்கிளைகளும் பாரம் நீங்கி உயரக்கிளம்பி), இலாதவர்க்கு
- வறுமையினால் பொருளில்லாமல்,
(தன்னிடத்தில் வந்து
யாசித்தவர்களுக்கு), இலை யெனா - என்னிடத்தில்
ஒன்றுமில்லை
என்று கையைத் தூக்கிக்காட்டியதற் கொப்பாயிராநின்றது, எ-று. (41)
இலாதவர்க்கு
+ இருந்து; இலாதவர்க்கு விருந்து
என வகர
உடம்படு மெய் பெற்றது. "உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்"
என்னுஞ் சூத்திரத்தில் கெடும் என்னாது ஓடும் என்றமையான், "இ ஈ
ஐ வழியவ்வும் ஏனை உயிர் வழிவவ்வும் என்னுஞ் சூத்திரப்படி வகர
உடம்படு மெய்பெற்றதென்க. "வெண்ணிலா மதியந்தன்னை
விரிசடை
மேவவைத்து - வுண்ணிலாப் புகுந்து" என்றார் பிறரும்.
1089. சிறப்பொடிங் கடைந்த தேவர் செறிபொழி லதனைச் சேர்ந்தாற்
றுறக்கத்தை மறப்ப ரென்றாற் சொல்லுவ தினியென் னன்றிப்
பிறப்பெறிந் திருந்த வீரன் பெருமையைச் சிறிது காட்ட
விறப்பவு முயர்ந்த தேவ ராசனா லியன்ற தன்றோ.
(இ-ள்.)
இங்கு - இவ்விடத்தில் இந்த
ஸமவஸரணத்தில்,
சிறப்பொடு - பூஜாத்திரவியங்களோடு கூடி,
அடைந்த - சேர்ந்த,
தேவர் - தேவர்கள், செறி - மரங்களால் நெருங்கிய, பொழிலதனை -
கற்பக விருட்ச பூமியை, சேர்ந்தால் -
அடைந்தால், துறக்கத்தை -
தேவருலகத்தை, மறப்பர் - மறந்து விடுவார்கள்,
என்றால் - என்று
சொன்னால், இனி - இன்னமும், சொல்லுவது -
அப்பூமியை
வர்ணித்துரைப்பது, என் - யாது?, அன்றி - அதுவல்லாமலும்,
பிறப்பு
- ஜனன மரணங்களை, எறிந்திருந்த - கெடுத்திராநின்ற, வீரன் -
அனந்த வீரியனாகிய ஜினேந்திரனுடைய,
பெருமையை மஹாத்மிய
குணத்தை, சிறிது - கொஞ்சம்,
காட்ட - யாவர்களுக்கும்
காண்பிக்கும்படி, இறப்பவும் - மிகவும்,
உயர்ந்த - மேலான,
தேவராசனால் - தேவேந்திரனால், இயன்றதன்றோ - (இது)
நிருமிதம்
செய்யப்பட்டதல்லவோ, எ-று. (42)
1090. பளிக்குநற் றலமி தென்று வாவியுட் பாதம் வைத்துக்
குளிக்கவீழ்ந் தவரைக் காணாக் கைகொட்டிச் சிரிப்பர் நோக்கா
|