சமவசரணச்சருக்கம்515


Meru Mandirapuranam
 

   பளிக்கறைத் தலத்தை வெள்ளப் பரப்பென்று பார்த்து மீள்வா
   ரொளிப்பிழம் பிவற்றைப் பித்தி யென்றுபோக் கற்று நிற்பார்.

   (இ-ள்.)   (இன்னும்     அங்கே),    பளிக்குநற்றலமிதென்று -
இவ்விடம்ஸ்படி   கரத்தினத்தினாலாகிய   பூமியென்று,  நோக்கா -
பார்த்து, வாவியுள் -  தடாகத்தினுள், பாதம் - கால்களை, வைத்து -
இட்டு,    குளிக்க  -   சரீராதிகள்   நனைய,   வீழ்ந்த   வரை -
வீழ்ந்தவர்களை,    காணா   -   (அருகிலிருப்பவர்கள்)   பார்த்து,
கைகொட்டி - கையைத்  தட்டிக்கொண்டு,  சிரிப்பர்  - சிரிப்பார்கள்,
(இன்னும்  சிலர்),  பளிக்கறைத்  தலத்தை   -  ஸ்படிகத்தினாலாகிய
பூமியை,  வெள்ளப்  பரப்பென்று  -  ஜலபூரிதமாகிய  தடாகமென்று,
பார்த்து -  நோக்கி,  மீள்வார்  - அதிற்செல்லாமல் திரும்புவார்கள்,
ஒளிப்பிழம்பிவற்றை -  ஒளியின்  சமூகத்திரட்சி முதலிய இவற்றினை
பித்தியென்று -  கண்ணாடிச்   சுவரென்று,  போக்கற்று  -  அங்க
செல்கையற்று, நிற்பார் - நிற்பார்கள், எ-று. (43)

 1091. கதிர்மணி மாடந் தம்மைக் கண்ணுறு வார்தஞ் சாயை
     யெதிர்வரு வாரை யொப்ப விடைந்திடைந் தெங்கு நிற்பர்
     மதுரமாந் தஞ்சொற் றாமே தமக்கெதிர் மாற்ற மாக
     வெதிரெதிர் மொழிகின் றாரொத் தியம்புவ ரெங்கு மெங்கும்,

    (இ-ள்.)   கதிர்   -  கிரணத்தையுடைய,   மணி   -  ஸ்படிக
மணிகளாலாகிய  மாடந்தம்மை  - உப்பரிகைகளை, கண்ணுறுவார் -
பார்க்கின்றவர்கள், தம் - தங்களுடைய, சாயை - பிரதிச்சாயலாகியது,
எதிர் வருவாரை -  எதிர்வரப்பட்டவர்களுக்கு,  ஒப்ப  - சமானமாக,
(அவர்கள்), எங்கும் - எவ்விடங்களிலும்,  இடைந்திடைந்து - ஒதுங்கி
யொதுங்கி, நிற்பார் - நிற்பார்கள், எங்குமெங்கும் - எவ்விடங்களிலும்,
மதுரமாம் - மாதுரியமாகிய,  தஞ்சொல்  - தங்களுடைய வசனங்கள்,
தாமே -  தாமே,    தமக்கு  -    தங்களுக்கு,   எதிர்மாற்றமாக -
பிரதிசப்தமாக,  எதிர்  எதிர்   எதிரெதிராக, மொழிகின்றாரொத்து -
சொல்பவர்களையொத்து, இயம்புவர் - பேசுவார்கள், எ-று. (44)

வேறு.

 1092. வரைபுரையு மாளிகையி னிரைகளவை யொருபால்
      பருதியொளி தெறுவபல மண்டபங்க ளொருபால்
      மருவினரு மறிவரிய மாடநிரை யொருபால்
      பருமணிய தூணிரைய பாடலிட மொருபால்.

    (இ-ள்.) (அந்தக்  கற்பகவிருட்ச  பூமியில்),  வரை  புரையும் -
பர்வதத்திற்குச்     சமானமாகிய    (அதாவது :     பர்வதம்போல்
உன்னதமாகிய), மாளிகையின் - உப்