518மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

    தொக்கநல காயமன வசிவலிக ளொருபால்
    பக்கமுத னோன்புடைய பரமதவ ரொருபால்.

   (இ-ள்.)   உக்கதவர்  -    உக்கிர     தபஸையுடையவர்களும்,
தித்ததவர் -  தீப்த  தபமுடையவர்களும்,  தத்ததவர்    -    தப்த
தபஸ்வியர்களும், ஒருபால் - ஒரு பக்கத்திலிருப்பார்கள், மிக்கதவர் -
மஹா       தபஸையுடையவர்களும்,     கோரதவர்   -    கோர
தபஸையுடையவர்களும்,   (ஆகிய   தபோரித்தியை  யுடையவர்கள்),
மேவும்   இடம்   -    பொருந்துமிடம்,    ஒருபால்    -    ஒரு
பக்கத்திலேயிருக்கும், நல - நன்மையாக, தொக்க - சேர்ந்திரா நின்ற,
காய மன  வசிவலிகள்  -  காயபெலிகளும் மனோபெலிகளும் வசன
பெலிகளுமாகிய  பெலரித்தி  பெற்ற  முனிவர்கள்,  ஒருபால்  - ஒரு
பக்கத்திலேயிருப்பார்கள்,    பக்க    முதல்   -   பக்ஷோபவாஸம்
மாஸோபவாஸாதி  விரதங்களையுடைய,  பரம  -  மேலான, தவர் -
தபத்தையுடையவர்கள்,  ஒருபால்  -  ஒரு  பக்கத்திலேயிருப்பார்கள்,
எ-று. (50)

 1098. மாசுமலம் வாய்த்திவலை மூக்குடைய மருந்தாம்
     பேசரிய பெருந்தவர்க ளிருந்தவிட மொருபால்
     வாசநறு நெய்யமுது பாலமுது வின்மே
     லாசையற வுரைசெய்மொழி யருந்தவர்க ளொருபால்.

    (இ-ள்.)    கதிர்     -    கிரணத்தையுடைய,    மாசுமலம் -
(தங்களுடைய)    சரீரத்தின்மேலாகிய    அழுக்குத்    தூளிகளும்,
வாய்த்திவலை  -   வாயிலுண்டாகிய   நீர்த்துளியும்,  மூக்குடைய -
மூக்கிலுண்டாகும்   சளிப்பும்,   (ஆகிய   இவைகள்),   மருந்தாம் -
பிறர்களின் வியாதிகளுக்கு மருந்தாகின்ற, பேசரிய - சொல்லுதற்கரிய,
பெரும் - பெருமையையுடைய  ஒளஷதரித்திகளை  யடைந்திராநின்ற,
தவர்கள் -    (ஆமௌஷதிப்   பிராப்தர்    கேளௌஷதிபிராப்தர்,
ஜல்லௌஷதி  பிராப்தர்,  விப்ரௌஷதி  பிராப்தர்,  ஸர்  வௌஷத
பிராப்தர் ஆகிய)  தபஸிகள்,  இருந்த   - தங்கி யிராநின்ற, இடம் -
இடமானது,  ஒரு  பால்  - ஒரு  பக்கத்திலாகும்,  வாசம்   நறும் -
நறுமணம் பொருந்திய, நெய்யமுது - நெய்யன்னம், பாலமுதுவின்மேல்
- பாலன்னம் ஆகிய இவற்றின்மேல், ஆசையற - ஆசை நீங்கும்படி,
உரைசெய் - சொல்லப்பட்ட, மொழி - தர்ம வசனத்தையுடைய, அரும்
- அரிதாகிய, தவர் -  (க்ஷீரஸவீணம் முதலாகிய ரஸரித்தியையுடைய)
தபஸிகள், ஒருபால் - ஒரு பக்கத்திலே யிருப்பார்கள், எ-று. (51)

 1099. முதலிறுதி நடுவணொரு பதமதுகொண் டந்நூல்
     விதிமுழுது மறிஞர்சிலர் மூலபத மேவி
     முதனடுவு முடியவுணர் வார்சம்பின்ன மதிகண்
     மதியின்புகை பன்னிரண்டின் வருமொழிக ளறிவார்.