520மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

களும்,  கேட்பவர்  -  பேஸ்ரீதாக்களும்,  நிருக்தர் -  பதம் பிரித்துத்
தெளிய   வியக்தி   சொல்லுகின்ற   வியாக்கியன   கர்த்தாக்களும்,
வாதியர்கள் -  தர்க்க  சாஸ்திரம் படித்து யூகித்துத் தத்துவ நிச்சயஞ்
செய்பவர்களும், கற்ற - தாம் கற்ற ஆக மாத்தியயனத்தை, மறவாத -
மறுபடி மறந்து போகாத,  மதியோர்கள் - தாரணா மதிஜ்ஞான வீரிய
வந்தர்களும்,  மேதகைய -  மேன்மை  பொருந்திய,  சிந்தனைகள் -
தருமத்தியான  சுக்கிலத்  தியானங்களை,  மேவுநர்கள் -  பொருந்தி
பாவிக்கின்ற   ஏகாக்கிரசித்த  தபஸ்வியர்களும்,  ஒரு  பால் - ஒரு
பக்கத்திலிருப்பார்கள், எ-று. (54)

 1102. புக்கவிடஞ் சக்கரன்றன் படையொதுங்கப் போது
     மிக்கதவர் பாணிமிசை மேயமிகை யடிசில்
     புக்குலக முண்டிடினும் போதுபக லெல்லைத்
     தக்கதவர் முதன்முனிவர் சாற்றமுடி யாரே.

   (இ-ள்.)   (இன்னும் அங்கே),  புக்கவிடம்  - தாம் அடைந்திரா
நின்ற  இடமானது,  (அளவினால்   அற்ப   விஸ்தீர்ணமாயிருந்தும்),
சக்கரன்  தன் -  மஹா  சக்ரவர்த்தியினுடைய,    படை -  த்வாதச
யோஜனை விஸ்தீர்ணமாகிய பெரும்படைகள், (வந்துற்றாலும்), ஒதுங்க
- தங்குவதற்கு,  போதும்  -  குறைவில்லாமல்  போதும்   படியான,
(அக்ஷீண     மஹாலயத்துவமென்கின்ற ரித்தியையுடைய),   மிக்க -
மிகுதியாகிய,  தவர் -  தபஸையுடைய  முனிபேஸ்ரீஷ்டர்களும்,  பாணி
மிசை - (பிக்ஷா  போஜியாகச் சரியா மார்க்கம் வந்த காலத்தில் பத்ர
சீலர்கள்  எதிர்கொண்டழைத்து  சப்த  குணங்களுடன்  நவபுண்ணிய
விதிக்கிரமத்தால்  உதவ)  தமது கையில், மேய - பொருந்திய, மிகை
அடிசில் - மிகுந்த அன்னமானது,  (அதாவது :  தாம் உண்டதுபோக
மிகுந்திருந்த      ஆகாரமானது),       உலகம்       -    இந்த
உலகத்துள்ளோரெல்லாரும்,   புக்கு  -  அடைந்து,  உண்டிடினும் -
பொஜித்தாலும்,  பகலெல்லை  -   அன்று   பகற்பொழுதுவரையில்,
போதும் -  குறைவடையாமல்போதும்  படியான, தக்க - தகுதியாகிய,
தவர் முதல் -(அக்ஷீண மஹா அசனத்துவமென்கின்றரித்தியையுடைய)
தவசிரேஷ்டர்கள் முதலாகிய, முனிவர் - முனிவர்கள், சாற்ற முடியார்
- சொல்ல முடியாத தன்மையாக  ஸம்மியக  தரிசனஞான  சாரித்திர
குணவிர்த்தியையுடையவர்களாக  இருப்பார்கள், எ-று. (55)

 1103. இனையமுனி வனமிதனின் வீதியிரு மருங்கிற்
     கனகமணி வேதிகைவில் லுடையகொடி யதனின்
     னினையமலி நிலங்களையவ் வேந்தர்பணிந் தேத்தி
     யனகமன ராயிறைஞ்சி யாசிர மடைந்தார்.

   (இ-ள்.)  வீதி - ஆறாம் பிராகார சதுர்   மஹா வீதிகளினுடைய,
இருமருஞ்கில் - இரண்டு பக்கங்களிலுமாகிய,  வனமிதனின் - இந்தக்
கற்பக விருட்சாவனி