522மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

செய்யக்கண்ட), வான் - பெரிதாகிய, கடல் - ஸமுத்திரத்தினது, ஓதம்
-   ஜலமானது,   ஏற -   அதிகரித்து  வெளியாகி  வர,   உடன் -
அதனுடனே,  புகும் -  எதிர்த்து  அதனுள்ளடைகின்ற, ஆறுபோல் -
ஆற்று  ஜலங்களைப்  போல்,  நாதன்  -  ஸ்வாமியினுடைய, மா -
பெருமை பொருந்திய, நகர் - சமவஸரணத்தினது, முன்றிலின் - எதிர்
முற்றத்தில், (இராநின்ற இந்த ஜயாசிரய மண்டபத்தின்), வாய்தல் வாய்
- வாசற்படி  வழியில்,  போதுவார்  -  உள்ளிருந்து  வருபவர்களும்,
புகுவார்கள்  -   வெளியினின்று   போகின்றவர்களும்,  மிடைந்து -
நெருங்கி, அறார் - பற்றறாதவர்களாவார்கள், எ-று. (58)

 1106. சுந்த ரத்தர ளம்பவ ழத்திரள்
     பந்தி பந்தி பரந்தன பார்மிசை
     யிந்து வின்கதி ரோடிர விக்கதிர்
     வந்து வாலுக மாயின போலுமே.

   (இ-ள்.)   (அங்கே),  சுந்தரம்  -  அழகிய,  தரளம்  -  முத்து
மணிகளும்,  பவழத்திரள்  -  பவழ  ஸமூகங்களும்,  பந்தி  பந்தி -
தனித்தனி  வரிசை  வரிசைப்  பட்டைகளாக,  பார்மிசை  - பூமியின்
மேல்,   பரந்தன  -  விசாலித்திரா    நின்றன,  (அத்தோற்றத்தைப்
பார்த்தால்), இந்துவின் கதிரோடு - சந்திர கிரணத்துடன், இரவிக்கதிர்
- சூர்ய  கிரணமும்,   வந்து  -   இவ்விடம்  வந்து,  வாலுகமாயின -
மணலாயினதை, போலும் - நிகர்க்கும், எ-று. (59)

 1107. மரைத்த லத்தரை சோதிட மண்டிலம்
     வரைத்த குங்குமஞ் சந்தன மண்டிலம்
     நிரைத்த செங்கம லங்க ணிலமிசைத்
     தரைத்த லத்தெழு தாமரை போலுமே.

   (இ-ள்.)  (பின்னையும்   அந்த  ஜெயாஸ்ரீயமண்டபத்தில்  மேல்
பரப்பின்  உள்ள  பாகத்தில்),  குங்குமம்  -  குங்குமக் குழம்பாலும்,
சந்தனம்   -    சந்தனக்    குழம்பாலும்,   வரைத்த   -   அளவு
செய்தெழுதப்பட்ட,   மண்டிலம்   -   சூரிய   சந்திர  வட்டங்கள்,
மரைத்தலத்தரை - புஷ்கரவரத்வீபத்தின் பாஹ்யார்த்த பாகத்திலுள்ள,
சோதிட மண்டிலம் -  ஜோதிஷ்க   தேவர்களாகிய   சூர்ய   சந்திர
மண்டலங்கள்   செல்கையில்லாமல்   ஸ்திரமாக   நிற்பது   போல
விளங்கும்,  (இன்னும்),    நிலமிசை -  பூமியில்  அல்லது  அடியில்,
செங்கமலங்கள் -  செந்தாமரைப்  பூக்கள்,  நிரைத்த  - வரிசையாக
எழுதப்பெற்றனவாம், (அத்தோற்றத்தைப் பார்த்தால்), தரைத்தலத்து -
அப்புஷ்கரார்த்த  த்வீபத்தினுடைய  பூமியில்,  எழும் - உண்டாகிய,
தாமரைப் போலும் தாமரைப் புஷ்பத்தினை நிகர்க்கும், எ-று. (60)