1108. மாளி கைநிரை மண்டப மல்லவு
மாளி மானவர் தேவ ரடைந்துழி
நாளு நாளுநல் லின்பம் பயப்பன
சூளி யானையைச் சூழ்பிடி போல்வன.
(இ-ள்.)
மண்டபம் - அந்த ஜெயாஸ்ரீயமண்டபமும், அல்லவும்
- அஃதல்லாதனவும், மாளிகை நிரை - உப்பரிகை
ஸமூகங்களும்,
சூளி யானையை - ஆண் யானையையும், சூழ் - அதைச்
சூழ்ந்திரா
நின்ற, பிடிபோல் வன - பெட்டை யானைகளையும்
போல்வனவாம்
(அதாவது : அந்த ஜெயாஸ்ரீயமண்டபம்
ஆண் யானையைப்
போலவும், மற்ற மாளிகை முதலியவைகள் அதைச் சூழ்ந்த
பெட்டை
யானைகளைப் போலவும் விளங்கும்), ஆளி - ஸிம்ம
முதலாகிய
திரியக் ஜீவன்களும், மானவர் -
மனுஷ்யர்களும், தேவர் -
தேவர்களும், அடைந்துழி - அவ்வுப்பரிகைகளில்
சேர்ந்தபோது,
(அவை), நாளு நாளும் - எப்பொழுதும், நல் -
நன்மையாகிய,
இன்பம் - சௌக்கியத்தை, பயப்பன - கொடுப்பனவாம், எ-று.
ஆளிமானவர் - என்பதற்கு,
ஸிம்மம்போல் பராக்கிரமமுள்ள
மனுஷ்யர்கள் எனப் பொருளுரைப்பாருமுளர். (61)
1109. சிப்பி செய்கை முடிந்தன செய்வினை
துப்பு ருவை யுரைப்பன நன்னெறி
தப்பி னார்தடு மாற்றை விரிப்பன
விப்ப டிய விவற்றினே னைப்பல.
(இ-ள்.) இப்படியவிவற்றின்
- இவ்விதமாகிய இந்த
மண்டபத்திலும் உப்பரிகைகளிலும்,
செய்வினை - ஜீவர்களினால்
செய்யப்பட்ட புண்ணிய பாப
வினைகளின், துப்புருவை -
அனுபோகங்களினது அம்சங்களை, உரைப்பன
- சொல்லிக்
காட்டுவனவும், நன்னெறி - ஸத்சாரித்திரத்தினின்றும், தப்பினார் -
தவறித் துச்சாரித்திரத்தில்
வர்த்தித்தவர்களுக்கு, (ஏற்படும்),
தடுமாற்றை - ஸம்ஸார துக்கத்தை,
விரிப்பன - விசாலித்துத்
தெரிவிக்கப்பட்டனவும், ஏனை - இன்னும்
மற்ற, பல - அனேகம்
விவரங்களையுடையனவும் (ஆகிய),
சிப்பிசெய்கை -
தேவஸ்தபதிகளாகிய சிற்பிகளுடைய செய்கைகளெல்லாம்,
முடிந்தன
- அமைத்து முடிக்கப் பெற்றனவாம், எ-று. (62) 1110. மந்தி ரத்தை யணிந்துபொற் பீடிகை
யிந்தி ரத்துவ சம்மிடை நின்றன
சந்தி ரத்திர ளின்புள கத்திடை
வந்து நித்தில மாலைக ணான்றவே.
|