ஜீவன்களுக்கு,
ஆர்வமின்றி - தனக்கொரு
வாஞ்சையுமின்றி,
அறத்தை - தர்ம
ஸ்வரூபத்தை,
அளிக்கும் -
உபதேசிக்கின்றவனாயினான், எ-று. (68)
1116. மேரு வின்றிசை யெட்டையு மேவிய
வார ணம்மலை போல்வன மண்டப
மேர ணிந்துள வெண்டிசை யுமிதன்
நேர்முன் னின்றதோர் பீடிகை நன்றரோ.
(இ-ள்.)
இதன் - இந்த மஹோதய மண்டபத்தின், எண்டிசையும்
- எட்டுத் திக்குகளிலும், மேருவின்
- மஹம்மேருபர்வதத்தின்,
திசையெட்டையும் - எட்டுத் திக்குகளையும், மேவிய - பொருந்தியிரா
நின்ற, வாரணம் மலைபோல்வன
- திக்கஜ பர்வதங்களை
நிகர்ப்பனவாகிய, மண்டபம் - மண்டபங்களானவை,
ஏரணிந்து -
மிகவும் அழகைப்பெற்று, உள - உள்ளன,
நேர்முன் - (இந்த
மண்டபங்களையெல்லாந் தாண்டி வீதியில்) நேராக முன்னே, நன்று
- நன்மையானதாகிய, ஓர்பீடிகை - ஒரு பலி பீடமானது, நின்றது -
நிலைபெற்றுளது, எ-று.
அரோ - ஈற்றசை. (69)
1117. வல்லி நன்மணி பொன்மய மாகிய
வெல்லி யும்பக லும்பலி யேந்துமி
தெல்லை செய்திறை வன்னகர் வாயிலுட்
செல்ல வல்லிகண் மண்டப மீண்டுமே.
(இ-ள்.) வல்லி
- யோக்கியப் பிரமாணோத்ஸேத
அகல
நீளங்களையுடையதாகி, நல் - நன்மையாகிய,
மணிமயம் -
இரத்தினங்களின் சொரூபமும், பொன் மயம் -
ஸ்வர்ணங்களின்
சொரூபமும், ஆகிய - ஆன (அதாவது : இவைகளை
இழைத்துச்
செய்திராநின்ற), இது - இப்பீடமானது, எல்லியும்
பகலும் - இரவும்
பகலும், பலியேந்தும் - பலிபிண்டங்களை
பூஜகர்களால் தரிக்கும்,
எல்லை செய்து - இதனை
அளவிட்டு, (அதாவது :
இஃதிவ்வளவினதென்று ஆராய்ந்துகொண்டு),
இறைவன் நகர் -
ஜினேந்திரனுடைய ஆலயத்தின், வாயிலுள் - வாயிலுக்குள்ளே,
செல்ல - போக, (அவ்விடத்தில்), வல்லிகள் - பூங்கொடிகளையுடைய,
மண்டபம் - லதாமண்டபங்கள் (அதாவது : புஷ்பபந்தல்கள்),
ஈண்டும்
- நெருங்கியிருக்கும், எ-று.
மயம் - இரண்டிடங்களிலுங் கூட்டப்பட்டது. (70) 1118. போத றாமணிப் பீடத்தி னப்புறம்
வாய்தல் வீதியை நோக்கிய மண்டப
|