110. கடல்களும் மலையுங் கானும் வானமுங் கடல்கள் சூழ்ந்த
திடர்களும் கயமு மாறும் நாளிகைப் புறவுந் தீராப்
படுதுயர் நரக மேழும் நிகோதமும் பதேச முன்ன
ருடல்கிடந் தழிந்தி டாத விடமில்லை யுணரி னென்றான்.
(இ-ள்.) உணரின் - ஆராய்ந்தறியுமிடத்தில், கடல்களும் -
(அஸங்கியாத) ஸமுத்திரங்களும், மலையும் - (மஹாமேரு முதலான)
பர்வதங்களும், கானும் - (தேவாரண்ணியம் பூதாரண்ய முதலான)
வனங்களும், வானமும் - தேவலோகமும், கடல்கள் சூழ்ந்த -
ஸமுத்ரங்களினால் சூழப்பட்ட, திடர்களும் - (அஸங்கியாத)
த்வீபங்களும், கயமும் - (பத்மை முதலாகிய) தடாகங்களும், ஆறும் -
(கங்கா முதலாகிய) நதிகளும், நாளிகை - (த்ரஸ) நாளிகையும்,
புறவும்
- நாளிகாபாஹ்யமும், படு - உண்டாகிய, துயர் -
துக்கமானது, தீரா - நீங்காத, நரகமேழும் - சப்த நரகங்களும்,
நிகோதமும் - நிகோதமும்,
(ஆகிய) பதேசம் - இப்படிப்பட்ட
லோகப்ர தேசங்களிலே, முன்னர் - இதற்கு முன்னாலே, உடல்
கிடந்து - (நமது ஆத்மனாலே
எடுக்கப்பட்ட) சரீரம் கிடந்து,
அழிந்திடாத - நாசத்தையடையாத, இடம்
- க்ஷேத்ரமானது, இல்லை
- இல்லாததாகும், என்றான் - என்று
கூறினான், எ-று. (110)
111. வெருவுறு துயரந் துய்த்து விலங்கினுண் மயங்கும் போழ்தும்
மருவியாங் கருவின் மக்கள் யாக்கையின் வருந்தும் போழ்தும்
எரியன நரகின் மூழ்கி யெழுந்துவீழ்ந் தலறும் போழ்தும்
அருகன சரண மல்லா லரண்பிறி தில்லை கண்டாய்.
(இ-ள்.) வெருவுறு - பயத்தையே ஸ்வபாவமாகவடையும், துயரம்
- துக்கங்களை, துய்த்து - அனுபவித்து, விலங்கினுள் - விலங்கு
கதியில், மயங்கும்போழ்தும் - மயங்குகின்ற
காலத்தும், கருவின் -
கருப்பமாகிற, ஆங்கு - வயிற்றகமென்னும் அவ்விடத்தில், மருவி -
சேர்ந்து, மக்கள் யாக்கையின் - மனித சரீரத்தில்,வருந்தும்போழ்தும் -
வருந்துகின்ற காலத்திலும், எரியன, அக்கினிக்குச் சமானமாகிய,நரகின்
- நரகத்திலே, மூழ்கி - வீழ்ந்து, எழுந்து வீழ்ந்து - அதினின்றும்
ஆகாயத்தில் கிளம்பித் தலைகீழாக வீழ்ந்து, அலறும்போழ்தும் -
அழுகின்ற காலத்திலும், அருகன் - அருகத் பரமேஸ்வரனது,
சரணமல்லால் - பாதமல்லால், அரண் - துணையாவது, பிறிது -
வேறொன்றும், இல்லை - கிடையாது, எ-று.
அருகன - இதில், அ -சாரியை, கண்டாய் - அசை. (111)
112. இறந்தநம் பிறவி மேனா ளெண்ணுதற் கரிய
தம்முட்
கறந்துகொண் டுயிரை யுண்ணுங் காலன்வாய்ப்
பட்ட போழ்தும்
பிறந்துநாங் கதிக ணான்கிற்
பெருந்துய ருழக்கும் போழ்துந்
துறந்திடா வினைக ளன்றித் துணைபிறி
தில்லை கண்டாய்.
|