534மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

டகம்   -   கோட்டகங்களுமாம்,  நீர்மையால்   -   வரிசையினால்,
(அவைகளில்),   தனுமுப்பது  - கூடங்கள் முப்பதுவில்லும், இரட்டி -
கோட்டகங்கள் அறுபது வில்லும், நீண்ட - நீண்டனவாம், எ-று. (87)

 1135. தலமி ரண்டிவற் றின்வாய்தல் காவலா
     நிலையமந் தராளத்து நின்ற வெங்கணுந்
     தலையெழு நூறுமுற் சகதி யின்முறை
     நிலையிரண் டெழுபது நாற்பத் தெட்டுமாம்,

   (இ-ள்.)   இவற்றின் -   இந்த  ஜகதீதலத்தின்  மண்டபங்களின்
மேலே     யிராநின்ற,    தலமிரண்டு,    கூட    கோட்டகமாகிய
ஸ்தலங்களிரண்டும்,  நிலையம்  -  நிலைகளோடும், அந்தராளத்து -
அந்தராளங்களோடும்,  எங்கணும்  -   எவ்விடங்களிலும்,  வாய்தல்
காவலா - வாசற் றுவார காவற்காரார்களைப்போல,  நின்ற - நின்றன,
முற்சகதியில் -    முதல்    ஜகதிமண்டபத்தில்,   (மேலிருக்கப்பட்ட
கூடங்கள்), தலை - முதலிலே, எழுநூறு - எழுநூறோடே கூட, நிலை
- நிலைத்த,  இரண்டோடு  -  இரண்டுடன்,  எழுபது  -  எழுபதும்
(அதாவது : எழுநூற்றெழுபத்திரண்டும்), முறை - (அதற்குமேல்) கிரம
வரிசையால்,  நாற்பது   -   (இரண்டாவது  ஜகதிமண்டபத்தின்மேல்)
நாற்பதும், (அதாவது :  எழுநூற்று  நாற்பதும்),  எட்டும் - (மூன்றாஞ்
சகதி மண்டபத்தின்மேல்)   எட்டும்,  (அதாவது :  எழுநூற்றெட்டும்),
ஆம் - ஆகும், எ-று. (88)

 1136. கூடத்தி னெண்ணவே கோட்ட கங்கொடி
     பீடத்தி னெழுபத்தே ழாயி ரங்களி
     னூடுற்ற மூன்றுநூற் றெண்பத் தொன்றுமாய்
     நீடுற்ற முதலாஞ் சகதி நின்றவே.

   (இ-ள்.)  (மேற்கூறிய), கூடத்தின் - கூடங்களுடைய,  எண்ணவே
- கணக்கையுடையனவே,  கோட்டகம்  -   கோட்டகங்கள், நீடுற்ற -
பெரிதாகிய,    முதலதாஞ்சகதி   -     முதற்சகதி   மண்டபத்தின்
விளிம்புகளில்,     பீடத்தின்     -   பீடங்களில்   (ஸ்தாபிதமாகிச்
சூழ்ந்திராநின்ற),    கொடி   -    வரண்டகக்    கொடிகளானவை,
எழுபத்தேழாயிரங்களின்  -  எழுபத்தேழாயிரங்களோடு,   ஊடுற்ற -
ஊடே சேர்ந்த, மூன்று நூற்றெண்பத்தொன்றுமாய் - முந்நூற்றெண்பத்
தொன்றாகி, நின்ற நின்றன, எ-று. (89)

 1137. எழுபத்து நான்கையா யிரத்து மாறிய
     குழுவுற்ற விரண்டுநூற் றெழுபத் தொன்பது
     மெழுபத்தோ ராயிரத் தைம்பத் தாறுமாம்
     பழுதற்ற சகதிமேல் மேற்ப தாகையே.