536மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

 1140. பட்டிகைத் தலத்தின்மேற் பைம்பொற் கோயிலி
     னெட்டலாத் திசைமுகத் திருந்த மண்டபத்
     துட்டொளி திரண்டுகா வதமொன் றோக்கமும்
     விட்டொளி துளும்பவெஞ் சுடரி னின்றவே.

   (இ-ள்.)    பைம்பொன் - பசுமை  பொருந்திய பொன்னாலாகிய,
கோயிலின் -  ஸ்ரீநிலயமாகிய  கோயிலின், எட்டலாத் திசைமுகத்து -
எப்பக்கங்களிலும்,  இருந்த - சூழ்ந்திராநின்ற, பட்டிகைத் தலத்தின் -
இப்போது  சொன்ன  திரிமேகலைகளாகிய  ஜகதீ தலத்தின், மேல் -
மேலே,   இருந்த   -    (இப்போது    சொல்லப்பட்ட   கூடங்கள்
தோட்டகங்கள்      கொடிகளோடும்        விளங்கி)    யிருந்த,
மண்டபத்துட்டொளி  -  மண்டபங்களின்  ஜோதியானது,  திரண்டு -
சேர்ந்து,    வெம் - (யாவர்களும்) விரும்பும்படியான, சுடரின் - பால
சூர்யனைப்போல,  ஒளி  விட்டு  -  எவ்விடங்களிலும் கிரணங்களை
வீசி,    துளும்ப  -    ததும்ப,  ஒக்கமும்  -  அம்மண்டபங்களின்
உன்னதங்கள்,  காவதமொன்று  -  ஒவ்வொரு  காதமாக,   நின்ற -
இராநின்றன், எ-று. (93)

 1141. மகரவாய் மண்டபத் தரைய வாயநாற்
     சிகரவாய்ச் சினகரஞ் சிவஞ்செய் மூர்த்திகள்
     பகரொணா தனபரி வாரந் தன்னொடு
     புகரிலா வானத்தம் போன்று தோன்றுமே.

    (இ-ள்.)   மகரவாய்  மண்டபத்து  - முன்சொன்ன ஜகதீதலத்து
நிதானமான    அளவையுடையனவாகி       மூன்று     சுற்றாகிய
அம்மண்டபங்களில்,   (நாலு   மஹா   வீதியில்     தவிர   நாலு
கோணங்களிலும்),  நால்  வாய  -  நாலு  பக்கமும்  வாசற்படிகளை
யுடையனவாயும்,   வாய்   சிகர  -   பொருந்திய    கோபுரங்களை
யுடையனவாயும்,  (உள்ள),  சினகரம்  -  ஜின  சைத்யாலயங்களாம்,
(அதாவது :  ஒவ்வொரு  கோணத்திலும்  தனித்தனியாக  ஆறாகும்),
அரை -  அந்த  சைத்யாலயங்களின் மத்தியத்தில், பகரொணாதன -
சொல்ல     முடியாத     அழகையுடையனவாகிய,    சிவஞ்செய் -
(பார்க்கப்பட்டவர்களுக்குப்) புண்ணியத்தைச் செய்கின்ற, மூர்த்திகள்
-     ஜினப்பிரதிமைகள்,        பரிவாரந்          தன்னொடு -
சத்திரத்திரயசாமராதிப்ராதிஹார்யங்களுடன்,  புகரிலா - குற்றமில்லாத,
வான் -  அழகிய,  அத்தம்  போன்று -    கண்ணாடியைப்போன்று,
தோன்றும் - விளங்கும், எ-று. (94)

 1142. வில்லுமிழ்ந் திடுமணி மிடைந்த மேனிய
      நல்லநா மங்கணா லாறு மேவின
      செல்வமுந் திண்மையு மறிவும் வென்றியு
      நல்குவ நாற்றிக்கு முகமு நான்கவே.