சமவசரணச்சருக்கம்537


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)  (அந்த   ஜினப்   பிரதிமைகள்),   வில்லுமிழ்ந்திடும் -
கிரணத்தை   வீசும்படியான,   மணி   -    அழகை,  மிடைந்த  -
சேர்ந்திராநின்ற,  மேனிய   -  ரூபங்களையுடையனவாம்,    நல்ல -
நன்மையாகிய,   நாலாறு  - இருபத்துநான்கு, (தீர்த்தங்கரர்களுடைய),
நாமங்கள் - பெயர்களை,  மேவின - பொருந்தினவாம், செல்வமும் -
(வணங்குகின்றவர்களுக்கு)         சம்பத்தும்,      திண்மையும்  -
பராக்கிரமத்தையும், அறிவும் -  ஞானமும்,  வென்றியும் - ஜெயமும்,
நல்குவ - கொடுப்பவைகளாம்,  நாற்றிக்கும்  -  நாலு  திக்குகளிலும்,
முகமும் -  முகங்களும்,   நான்க  -  நாலாகவுடையனவாம், எ-று.

     வாசற்படியையுடைய   திக்குகள்  தோறும்  முகம் என்றதனால்
சதுர்முகபஸ்திகளாக மூன்று  சகதியிலும் இருப்பதால் எழுபத்திரண்டு
தீர்த்தங்கரர்களுடைய (அதாவது :  திரிகால   தீர்த்தங்கரர்களுடைய)
பெயர்களாகும் என்பது பெறப்படும். (95)  

வேறு.

 1143. நாத னுள்ளுறு நான்முகம் போலுநல்
     வாய்த னான்குடை மண்டப நான்கினுட்
     சாத கும்பமஞ் சங்கணா லைந்துவில்
     லோது மைம்பது மோங்கி யகன்றவே.

   (இ-ள்.)   உள்ளுறும் -   உள்ளேயடைந்திராநின்ற,    நாதன் -
ஜினேந்திரனுடைய, நான் முகம்போலும் - சதுரானனத்துவம் போலும்,
நல்   -  நன்மையாகிய,   வாய்தல்   நான்குடை  -   நாலு  மஹா
திக்குகளிலும்  நாலு   வீதி  வழிகளையுடைய,  மண்டபம்  -  இந்த
ஜகதீதல மண்டபங்கள்  மூன்றிலும்,  நான்கினுள்  - நாலு மஹா வீதி
வாசற்படி வழிகளில்,  (ஒவ்வொரு  திக்கு வழிகளிலும்), சாதகும்பம் -
ஸ்வர்ணத்தினாலாகிய      கும்பங்களை       நடுவில்     மேலே
வைக்கப்பட்டனவாகிய,  மஞ்சங்கள்  - மேடைகள், நாலைந்து வில் -
இருபது வில்லும்,  ஒதும்  -   சொல்லப்பட்ட, ஐம்பதும்  - ஐம்பது
வில்லும், ஓங்கி - உயர்ந்து, அகன்ற -  அகன்றனவாம்,  (அதாவது :
இருபது   வில்லுயர்ந்தும்,    ஐம்பது  வில்லகன்றும்  ஒரு  மண்டப
வழிக்கொன்றாக மூன்றுக்கும்  மூன்று  மேடைகள்  நாலு  திக்கிலும்
இராநின்றன) எ-று. (96)

 1144. மாரி போல முழங்குவ மஞ்சின்மேல்
     பேரி நான்முகச் சங்க மிரண்டுள
     காரி னுண்மலி சூரிய னேர்பொனின்
     வாரின் வந்திழி கண்டையு மாகுமே.

    (இ-ள்.)    அம்மஞ்சின்   மேல்  -    அந்த    மேடைகளில்
ஒவ்வொன்றின்மேலும், மாரி போல - வர்ஷா காலத்து மேகம் போல,
முழங்குவ - கர்ஜிக்கும்படியான,