538மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

பேரி - முரசமும், நான் முகம் - நான் முகமுடைய, சங்கம் - சங்கும்,
(ஆகிய)  இரண்டு - இந்த இரண்டும், உள - உள்ளனவாம், காரினுள்
- அழகோடு  கூடிய  அம்மண்டபத்தினுள்,  மலி -   ஒளி நிறைந்த,
சூரியனேர்    -    சூர்யபிம்பம்    போன்றதும்,   பொன்னின்   -
பொன்னாலாகிய,  வாரின்  -   சங்கிலியினின்றும், வந்திழி  - வந்து
அம்மேடையில்  தொங்குகின்ற,  கண்டை - சேமங்கலம் (அதாவது :
ஜெயமங்களம்     என்னும்     ஜெயகண்டையானது,)    ஆகும் -
விளங்குவதாகும், எ-று. (97)

வேறு.

 1145. கடிகையுஞ் சாமமுங் கலந்த சந்தியு
     முடிவினிற் கண்டைசங் கங்கள் பேரிகை
     யிடியெனத் தம்மிலே முழங்கி யின்னொலிப்
     படுவதா முப்பதோ சனைப ரக்குமே.

   (இ-ள்.)   கடிகையும்  -  ஒரு  நாழிகையும்,  சாமமும்  -  ஒரு
சாமமும்,   கலந்த   சந்தியும்   -   நாழிகையும்  சாமமும்  கலந்த
சந்திப்பாகிய   பதினைந்து   நாழிகையும்,  முடிவினில்  -  முடிந்த
காலமாகிய  இவைகளில்,  (அதாவது : நாழிகை முடிவில்), கண்டை -
ஜெயகண்டையும்,  (ஒரு  சாம  முடிவில்),  சங்கங்கள் - சங்குகளும்,
(பதினைந்து நாழிகையில்),  பேரிகை - பேரிகையும், (சப்திப்பனவாகிப்
பதினைந்து  நாழிகை  சென்ற  வேளையில்,  நாழிகை முடிவும் சாம
சந்தியும்  வருவதால்  அப்போது  இந்த  மூன்று   வாத்தியங்களும்),
இடியென  -  மேககர்ஜனையைப்போல,  தம்மிலே  -  தமக்குள்ளே
மூன்றும்  ஒன்றாகச்   சேர்ந்து,   முழங்கி   -   கர்ஜிக்க,  இன்  -
இனிமையாகிய, ஒலி - அந்த  சப்தமானது,  படுவதாம் - வியாபிக்குந்
தூரமாகிய, முப்பதோசனை - முப்பது யோஜனை  தூரம்,  பரக்கும் -
விஸ்தரித்துக் கேட்கும், எ-று. (98.)

 1146. பெருமலர் மாரிய பேரி யாதியின்
      றிருநிலை வாய்தல்க ளிரு மருங்கிசை
      மருவிய கருவிக ளேந்திக் கந்தப்ப
      வரசர்க டேவிமார் பாட லாகுமே.

   (இ-ள்.)  பேரியாதியின்  -  பேரிகை   முதலாகிய   இப்போது
சொன்ன வாத்தியங்களையும்,  பெரும் - மிகுதியாகிய, மலர் மாரிய -
தேவர்களால் சொரியப்பட்ட புஷ்ப வருஷங்களையுமுடைய, திருநிலை
- இந்த  ஸ்ரீ நிலயத்தினுடைய, வாய்தல்கள் - வழிகளின், இருமருங்கு
-  இரண்டு   பக்கத்திலும்,    இசை  -   கீதங்களை,    மருவிய -
சேர்ந்திராநின்ற,  கருவிகள்  -  விணை  முதலாகிய வாத்தியங்களை,
ஏந்தி -  தரித்து,  கந்தப்பவரசர்கள்  -  கந்தர்  வேந்திரர்களுடைய,
தேவிமார் -