சமவசரணச்சருக்கம்539


Meru Mandirapuranam
 

தேவியர்களின்,  பாடலாகும்  -    பாடல்கள்  நிகழ்கின்ற   சங்கீத
மண்டபங்களாகும், எ-று. (99)

 1147. மங்கல நிரையவே வாய்தல் தோரணப்
     பந்தியி னிரையவே படி முடிவெலா
     மிங்கெலா வாய்தலுங் காவ லோம்பலிற்
     றங்கினார் சோதமீ சான ராசரே.

   (இ-ள்.)   படி முடிவெலாம் - இந்த ஜகதீதல பூமிகளிலெல்லாம்,
மங்கலம்   -         அஷ்டமங்கலங்களின்,         நிரைய    -
வரிசைகளையுடையனவாம்,  வாய்தல்  -   வாசற்படி வழிகளெல்லாம்,
தோரணம் - மகர தோரணங்களினுடைய,  பந்தியின் - வரிசைகளின்,
நிரைய - ஸமூகங்களையுடையனவாம்,  இங்கு    -  இவ்விடங்களில்,
எலாவாய்தலும் - எல்லா வாசற்படிகளிலும், காவலோம்பலிற் - காவல்
செய்வதில்,    சோதமீசானராசர்   -  ஸௌதர்ம  ஈசான  கல்பத்து
தேவாதிபதிகள், தங்கினார் - தங்குதல் கொண்டார்கள், எ-று. (100)

 1148. இரவியெண் ணரியவாம் பரிதி யின்னிடை
      மருவிய தெனமணி யொளிசெய் மண்டலத்
      துருவொரு பிழம்பதா யொளியிற் றோன்றிடுந்
      திருநிலை யம்மெலாந் திருநி லையமே.

   (இ-ள்.)  எண்ணரியவாம்  -   அஸங்கியாதமாகிய்,   இரவி   -
சூர்யர்கள்,    பரிதியின்னிடை -   பரிவேஷ்டத்தினுடைய மத்தியில்,
மருவியதென - சேர்ந்து  பிரகாசிப்பது  போல,  மணியொளி செய் -
இரத்தின   ஜோதி செய்கின்ற,  மண்டலத்து  -  பரிவேஷ்டத்தினுள்,
உருவு - இந்த ஸ்ரீ நிலயத்தின்  ரூபமானது,  ஒரு பிழம்பதாய் - ஒரே
கூட்டமாக, ஒளியில் - பிரகாசத்தோடு,  தோன்றிடும்  - காணப்படும்,
திருநிலையம்மெலாம்      -   இப்படிப்பட்ட      ஸ்வரூபமுடைய
ஸ்ரீநிலயமெல்லாம், திருநிலையம்மே - ஸ்ரீ நிலையமே, எ-று.

   இங்ஙனங் கூறியதனால், இதற்குவேறொன்று உபமையாகாதென்பது
பெறப்படும். (101)

 1149. பலநெறி யொளிமணி பயின்ற பந்தியு
     மிலதையும் வல்லியு மிருந்த கூடமும்
     விலையல்குன் மடநல்லார் மேக லைகளு
     முலைகளும் போன்மயக் குறுக்கு முற்றுமே.

  (இ-ள்.)   முற்றும் -   அந்த  ஜகதீதலங்கள்  முழுதும்,  பல  -
பலவாகிய,  நெறி  -  வழிப்பாட்டையுடைய, ஒளி - பிரகாசியாநின்ற,
மணி - இரத்தினங்களி