540மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

னால்,   பயின்ற   - செய்திராநின்ற, பத்தியும் - பந்தி வரிசைகளும்,
இலதையும்  -  இலைக்கொடிகளின்  வேலையும், வல்லியும் - கோல்
கொடி  வேலைகளும்,  இருந்த  -  செய்திராநின்ற,  கூடமும் - கூட
கோட்டகங்களும், (பார்த்தால்),  விலையல்குன்மடநல்லார்  - வேசியா
ஸ்த்ரீகளுடைய, மேகலைகளும் -  மேகலாபரணங்களும், முலைகளும்
- ஸ்தனங்களும்,  போல்  -  போல,  மயக்குறுக்கும்  -  பிரமிக்கச்
செய்யும், எ-று. (102)

 1150. துவர்ப்பசை நான்கிலார்க் கிறைவன் றொன்னகர்ச்
     சுவர்த்தல் நான்கிரு காத மோங்கிமா
     தவர்க்கிறை நகர்ச்சுவ ரகலம் பாதமே
     லுவப்பமூன் றோசனை விரிந்த கன்றவே.

   (இ-ள்.)   படி முடிவெலாம் - இந்த ஜகதீதல பூமிகளிலெல்லாம்,
மங்கலம்  & துவர்ப்பசை  நான்கு - சதுஷ்கஷாயங்கள், இலார்க்கு -
இல்லாதவர்களுக்கு,  இறைவன்  -  நாதனாகிய   ஜினேந்திரனுடைய,
தொல் - பழமையாகிய (அதாவது :   பாரம்பரியமாக வராநின்ற), நகர்
- சமவஸரணத்தில்,  (லட்சுமீவர   மண்டபத்தின்),   சுவர்த்தலம்  -
சுற்றுச்சுவர்கள், இரு -  பெரிதாகிய,   நான்கு காதமோங்கி  -  நாலு
காத        உன்னதமாகி,    மாதவர்க்கு  -   கணதராகி   மஹா
முனிவரர்களுக்கெல்லாம்,  இறை - நாதனாகிய அந்த பகவானுடைய,
நகர்ச்சுவர் -   முன்சொன்ன   கோவில்   சுவரினுடைய,  அகலம் -
அகலமானது, பாதம் - கால்  காதமாம், மேல் - (அந்தச் சுவர்போக)
அதற்கு மேல், உவப்பம் - உள்ளகலமானது, மூன்றோசனை - மூன்று
யோஜனை,    விரிந்து    -      விசாலமாகிய,       அகன்ற  -
அகலத்தையுடையதாகும், எ-று. (103)

 1151. தலங்களி னுயரமா மறுபத்து நான்குவில்
     விலக்குட னறுபத்து நான்கு வீழ்ந்தவ
     னிலங்கண்முன் னூற்றெழு பத்தோ ரைந்துகீழ்த்
     தலந்தன்மண் டலங்கண்மூ வாயி ரங்களாம்.

  (இ-ள்.)   தலங்களின் - (முன்  சொன்ன  அந்தச் சுவருக்குமேல்
கோபுரத்தின்) தலங்களினுடைய, உயரம் -  உன்னதமானது, அறுபத்து
நான்கு  வில் -  (ஒவ்வொன்றுக்கும்)  அறுபத்து  நாலுவில்,  ஆம் -
ஆகும்,   உடன் -  உடனே,  விலங்கு - குறுக்காக, அறுபத்து நாலு
வீழ்ந்து - (அடிநிலையாகிய  பன்னிரண்டு  காதம்  அதாவது மூன்று
யோஜனை  அகலத்தினின்றும்)  அறுபத்து  நாலுவில்லகலம் சுற்றிலும்
மேகலையாக  வீழ்ந்து,   நிலங்கள்  -  (மறுபடியும்   அறுபத்துநாலு
வில்லுயர்ந்து   அதன்   மேல்   அறுபத்து   நாலுவில்  குறுக்காகச்
சுற்றிலுமகன்று    மேகலையாகி      இம்மாதிரியாகவே     மேலே
மேலே)       நிலைகளானவை,       முந்நூற்றெழுபத்தோரைந்து -
முந்நூற்றெழுபத்தைந்து,     கீழ்   -    அடியிலாகிய,   தலந்தன் -
அறுபத்துநாலுவில்