சமவசரணச்சருக்கம்541


Meru Mandirapuranam
 

லகன்ற  முதனிலையாகிய  தளத்தில்,  மூவாயிரம்  - மூவாயிரமாகிய,
மண்டலங்கள் - மேடைகள், ஆம் - ஆகாநின்றன, எ-று. (104)

 1152. ஆயவித் தலந்தொறும் மண்டல மெட்டினை
      மாயச் சென்றொழிந் திருந்த வெட்டின்மேற்
      றூயமண் டலத்தொகை யிலக்க மைந்தினோ
      டாயிர மறுபத்து நான்கு மாகுமே.

   (இ-ள்.)   ஆய  -  இப்படி  முதனிலையில் மூவாயிரங்களாகிய,
மண்டலம்      -    மேடைகளானவை,        இத்தலந்தொறும் -
இந்தக்கோபுரத்தின்  மேல்  மேல்   நிலைகள் தோறும், எட்டினை -
எட்டெட்டு  மேடைகளாக, மாயச்சென்று - குறைவாகிச்சென்று, மேல்
- மேனிலையாகிய  முந்தூற்றெழுபத்தைந்தாம் நிலையில், ஒழிந்திருந்த
- மீந்து  நின்ற  மேடைகள்,  எட்டு  -    எட்டேஆகும்,   தூய -
பரிசுத்தமாகிய,    மண்டலத்தொகை    -      இந்தக்கோபுரத்தின்
மொத்தமேடைகளின்  சங்கியைகள்,  இலக்கமைந்தினோடு  -  ஐந்து
லட்சத்தோடு,     ஆயிரமறுபத்து   நான்குமாகும்   -    அறுபத்து
நாலாயிரங்களாகா நின்றன, எ-று. (105)

வேறு.

 1153. கடித டத்தள வுள்ள வரண்டகம்
     படியி னாற்றடி நான்கிற் பரந்தன
     கொடி நிரைத்தன கோயி னிலங்களை
     மடநல் லார்கலை போல வளைந்தவே.

   (இ-ள்.)  கோயில் -  ஸ்ரீ நிலயமாகிய  கோயிலில், நிலங்களை -
இப்போது சொன்ன கோபுரத்தில் ஒவ்வொரு நிலங்களிலும் அறுபத்து
நாலு     வில்லுயர்ந்த     விளம்புகளில்,      கடிதடத்தளவுள்ள -
துவஜக்கொடியில்  பேர்  பாதிப் பிரமாணமான, வரண்டகம் கொடி -
வரண்டகத்துவஜங்கள்,   நிரைத்தன - சூழ்ந்தனவாகி, படியினால்  -
கிரமத்தினால், தடிநான்கில் - நான்கு  வில்லுக்கொன்றாக, பரந்தன -
பரவினவாம்,       (அவற்றைப்     பார்த்தால்),     மடநல்லார் -
ஸ்தரீமார்களுடைய,  கலைபோல  -  மேகலை  போல,  வளைந்த -
சூழ்ந்திராநின்றனவாம், எ-று. (106)

1154. தேசுலாத் திருநிலை யத்தின் மேனிலங்
     கோசநீண் டகன்றுவச் சிரத்த டக்கமாய்
     மாசிலா மணிகளான் மலிந்த தன்மிசைக்
     கோசநான் குயர்ந்துபொற் கும்ப மாகுமே.

     (இ-ள்.)       தேசுலாம்   -  ஜோதியால்வியாபித்திராநின்ற,
திருநிலையத்தின்   -  ஸ்ரீ    நிலய   கோபுரத்தின்,   மேனிலம் -
முந்நூற்றெழுபத்தைந்தாவது நிலையில்,