542மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

கோச  நீண்டகன்று  -  ஒரு குரோசம் அகல நீளமாகி, வச்சிரத்து -
வஜ்ர  ரத்தினத்தால், அடக்கமாய் - மேலே தளமாகச் செய்து, அதன்
மிசை  -  அதன்  மேல்,  மாசிலா -  குற்றமில்லாத, மணிகளால் -
இரத்தினங்களால்,  மலிந்து  - நிறைந்து, கோச நான்குயர்ந்து - நாலு
குரோசம்   உன்னதமாகி,    பொற்கும்பமாகும் -    பொன்னலாகிய
கடமானது ஆகாநின்றது, எ-று. (107)

வேறு.

 1155. இரவிவந் துதய மேறி யிருந்தது போலு மிந்தத்
     திருநிலை யத்தி னுச்சி செம்பொற்கும் பத்த சென்னி
     மருவிய கமலத் துட்செம் மாமணி பாத மோங்கி
     விரகினாற் கோசம் பாதம் விரிந்துகீழ் சுருங்கிற்றாம்மேல்.

   (இ-ள்.)   இரவி  -  ஸூர்யன்,  உதயமேறி  வந்து - உதயாசல
பர்வதத்தின்   மேல்   உதயமாகி   வந்து,    இருந்தது  போலும் -
பிரகாசித்திருந்ததற்குச் சமானமாகிய, இந்தத் திருநிலையத்தின் - இந்த
ஸ்ரீநிலைய கோபுரத்தின்,  உச்சி - மேலே யிராநின்ற, செம் - சிவந்த,
பொற்கும்பத்த  -   பொன்னாலாகிய  கும்பத்தினுடைய,  சென்னி -
அக்கிரத்திலே,  மருவிய  -  சேர்ந்திராநின்ற,  கமலத்துள், தாமரைக்
கமலத்திலே,  (உள்ள),    செம்மாமணி  -   பத்மராகரத்தினமானது,
பாதமோங்கி    -    முன்    சொன்ன   கும்பத்தின்   உயரத்தில்
நாலிலொன்றாகிய    கால்பாகம்    (அதாவது  :  ஒரு   குரோசம்)
உன்னதமாகி,  கீழ் -  அடியில்,  கோசம்  பாதம்  -  கால்குரோசம்,
விரிந்து - அகன்று,  விரகினால் -  கிரமத்தினால்,   மேல் - மேலே,
சுருங்கிற்றாம் - சுருங்கப்பட்டதாம், எ-று. (108)

 1156. இத்தலத் தகத்தி னுள்ளா லினமணிக் குமுத வீற்றின்
     வைத்தபொற் கமலஞ் சூழ்ந்து காவத மாய தன்பான்
     முத்தமா லைகள்போய்க் கந்த குடியினை முழுதுஞ் சூழ்ந்த
     தத்துநீர் கங்கை கூடந் தன்மிசைச் சென்ற தன்றே.

   (இ-ள்.) இத்தலத்து - (இப்போது சொல்லிவந்த  விதமாயிராநின்ற
முந்நூற்றெழுபத்தைந்து    நிலைகள்       பொருந்திய     இந்தக்
கோபுரத்தலங்களினுடைய,   அகத்திலுள்ளால்   -    முதனிலையின்
கீழுள்ள மண்டபத்தின் மேலே   மத்தியில் (அதாவது : பன்னிருகாத
மகன்ற     அம்மண்டபத்தின்    மேலே    நடுவில்    அதாவது :
அம்மண்டபத்தின்   கீழே   நடுவிலிரா  நின்ற  ஒரு  காத  மகன்ற
கந்தகுடிக்கு  நேராக  மேலே), இனம் - உயர்ந்த இனமாகிய, மணி -
இரத்தினத்தாலே  செய்த,  குமுதவீற்றின்  - குமுத விருத்தத்தினாலே
(அதாவது : கர்ணிகையாக்கிருதியாக  உள்ள சிகரத்தாலே), வைத்த -
நடுவில்    வைக்கப்பட்டதாகிய,  பொற்கமலம்  -  பொன்னாலாகிய
தாமரைக்கமலமானது, காவதமாய் - ஒரு காதவகல