சமவசரணச்சருக்கம்543


Meru Mandirapuranam
 

முடையதாகி,  சூழ்ந்து  -  வ்ரத்தமாகச்  செய்திராநின்றதாகி, அதன்
பால் - அந்தக் கமலத்தினிடம், முத்த மாலைகள் - முத்து மாலைகள்,
போய்  -  தொங்கினதாகிப்  போகி,   கந்த  குடியினை  - அதற்கு
நேராகக்   கீழாகவிராநின்ற   கந்தகுடி   மண்டபத்தை,  முழுதும் -
முழுமையும்,  சூழ்ந்த  -  சூழ்ந்து  தொங்கின,  (அதைப்பார்த்தால்),
கங்கை  கூடந்தன்  மிசை  - கங்கா தேவியின் மாளிகையது சிரசின்
மேலே,  தத்து  நீர்  -  இமையோத்கிரி பர்வதத்தினின்றும்  ததும்பி
விழுகின்ற    ஜலமானது,    சொரிவதொத்த  -   சொரிகின்றதற்குச்
சமானமாயிரா நின்றது, எ-று. (109)

 1157. பருமணி கூட மொன்றின் பக்கத்தி னிரண்ட வற்றை
     மருவிய விரண்டு தூபை மண்டலம் மற்றி தன்கட்
     பெரியதெண் ணான்கு மெட்டும் வில்லுயர்ந் தகன்ற தன்றன்
     னரையதன் னரைய நின்ற வந்தர நுகம தாமே.

   (இ-ள்.)   மண்டலம்  -    (முன்   சொன்ன   ஸ்ரீ    நிலைய
கோபுரத்தினுடைய  நிலைகளிலிராநின்ற  மேடைகளில்)   ஒவ்வொரு
மேடைகளிலும், மணி - இரத்தின நிர்மிதமாகிய, பரும் - பெரிதாகிய,
கூடமொன்று -  ஒரு  கூடமானது  மத்தியிலிராநின்றது,  அவற்றை -
அந்தக்  கூடத்தை,  மருவிய,  சேர்ந்திரா   நின்றதாகிய,   இரண்டு
பக்கத்தின் -  இரண்டு   பக்கங்களிலும்,  இரண்டு  தூபை  -  ஒரு
பக்கத்துக்கு    இரண்டு    தூபைகள்   (அதாவது  :   கூடத்தைச்
சேர்ந்தாப்போல   பெரிய   தூபையும்   அதன்  பக்கத்தில்  சிறிய
தூபையுமாக இப்படி  ஒரே  மேடையில், நடுவில் கூடமும் கூடத்தின்
ஒரு பக்கத்துக்கும் பெரிதும் சிறிதுமாகிய இரண்டு தூபைகளும், ஆக
ஐந்தும்) இராநின்றன, மற்றிதன்கண் -  இந்த ஐந்துகளில், பெரியது -
பெரிதாகிய கூடமானது, எண்ணான்கு வில்லுயர்ந்து - முப்பத்திரண்டு
வில்லு   உன்னதத்தையுடையதாகி,   அதன்  தன்னரை  -  அந்தக்
கூடத்தின்  உன்னதம்   அகலங்களில்   பேர்பாதியாகிய   பதினாறு
வில்லுயரமும்   நாலு    வில்லகலமுமாகிய   பெரிய   தூபைகளும்,
அதன்னரை - அதில்  பாதியாகிய  எட்டு  வில்லுயரமும்   இரண்டு
வில்லகலமும் சிறிய தூபைகளுமாகி, நின்ற - இராநின்றன, அந்தரம் -
ஒவ்வொரு ஸ்தூபைகளுக்கும் கூடத்துக்கும்  இடைவிட்ட இடமானது,
நுகமதாம் - ஒரு வில்லுப் பிரமாணமாகும், எ-று. (110)

 1158. நிலங்கணான் கிரண்டொன் றாகி நின்றமா கூட மாகி
     யிலங்குமண் டலங்க டந்த மிடைநுக மிரண்ட வாகும்
     மலிந்துவெண் கொடிக ணின்ற மண்டல மொன்றி னூறும்
     விலங்கன்மே லெழுந்த வன்னக் குழாத்தினாற் பத்து நான்காம்.

     (இ-ள்.)   நிலங்கணான்கு - (மேடையின்  நடுவிலிருக்கப்பட்ட
கூடமானது) நாலு  நிலையும்,  இரண்டு - (அதன் ஓரத்தில் இராநின்ற
பெரிய ஸ்தூபை) இரண்டு நிலையும்,  ஒன்றாகி - ( அதன்  ஓரத்தில்
இராநின்ற சிறிய ஸ்தூபை) ஒரு நிலை