சதங்கை - சிறுமணிச்
சதங்கைகளுடையவும், மாலை -
மாலைகளினுடையவும், அரவமும் - சப்தமும், அனங்கன் வில்லும் -
மன்மதனுடைய வில்வடிவமும், ஆயிடை - அவ்விடத்தில் (அதாவது :
அக்கதவுகளுடைய பந்திகளிலும்
சட்டங்களிலும்
சட்டப்பொருத்துகளிலும்), பரந்த - பரவியிருந்தன, எ-று. (117)
1165. புளகமும் பிறையுஞ் கம்பி னீலத்தின் சவியும் பொற்றா
ரளகமு நுதலு நல்லார் வதனமு மனைய மொட்டின்
றளையவிழ் தாம முத்தின் றாமங்கள் வயிரத் தாம
மிளவெயின் விரிபொற் றாம மின்மணித் தாம மின்ன.
(இ-ள்.)
புளகமும் - (அந்தக்
கதவுகளின் சட்டப்
பொருத்துக்களில் உள்ள, குமிழ்களின்
கீழ் சூர்யன் போல
வட்டமாகிப் பிரகாசிக்கும்) கண்ணாடியும், பிறையும்
- சந்திரப்
பிரபை போன்ற கண்ணாடியும், கம்பின் - அந்தக் குமிழின்
ஆணி
முனையிலிராநின்ற, நீலத்தின் சவியும்
- பச்சை ரத்தினத்தின்
காந்தியும், (ஆகிய இவைகள்), நல்லார்
- ஸ்திரீமார்களுடைய,
பொற்றாரளகமும் - அழகிய மாலையணிந்த
அளகபாரத்தையும்,
நுதலும் - நெற்றியையும், வதனமும் - முகத்தையும்,
அனைய -
நிகர்த்தனவாம், (அதாவது : நீலரத்தின காந்தி கூந்தலையும்,
சந்திரப்
பிரபைக் கண்ணாடி நெற்றியையும், சூரியன்
போன்ற விருத்தக்
கண்ணாடி முகத்தையும் நிகர்க்கும்),
(இன்னுமக்கதவுகளில்,
மொட்டின்றளையவிழ்தாமம் - மொக்குகள் முறுக்கவிழ்ந்து
மலர்ந்த
பூந்தாமங்களும், முத்தின் தாமங்கள் - முத்து மாலைகளும்,
வயிரத்
தாமம் - வஜ்ர ரத்தின மாலைகளும்,
இளவெயில் - இளவெயில்
போன்ற பிரகாசம், விரி - பரவியிருக்கின்ற, பொற்றாமம் - பொன்
மாலைகளும், மின் - பிரகாசம் பொருந்திய, மணித்தாமம் -
இரத்தின
மாலகளும், மின்ன - பிரகாசிக்க, எ-று. (118) 1166. வம்புகொண் டெழுந்து சூழ்ந்த மணியொளி பரந்த வாய்த
றம்புடை யிருந்து யர்ந்த தமனிய பீடத் துச்சிக்
கும்பங்க ளிருந்த வற்றிற்
றூபங்கள் கோட்ப டாதே
யம்பரத் தெழுந்து திக்கைப் பரிமள மாக்கு நின்றே.
(இ-ள்.)
வம்புகொண்டு - புதுமையாகக்
கிரணங்களைக்
கொண்டு, எழுந்து - எழும்பி, சூழ்ந்த - வியாபித்த, மணியொளி -
இரத்தினங்களின் ஜோதியானது; பரந்த - விசாலித்த, வாய்தல் -
இப்போது சொன்ன வாசற்படியினுடைய,
புடை - ஸமீபமாக
அப்பியந்தரத்தில், இருந்து - இருக்கப்பெற்றதாகி,
உயர்ந்த - தக்க
உன்னதமுடைய, தமனியபீடத்து - ஸ்வர்ணபீடத்தின், உச்சி - மேலே,
கும்பங்கள் - தூபகலசங்கள், இருந்து இரா நின்றனவாகி, அவற்றில் -
அவைகளில், தூபங்கள் - தூபங்களானவை,
கோட்படாது -
குறைவுபடாமல், அம்பரத்து -
|