|
விரைமலர் மாரி மேலா முகத்தவாய்
விழுந்த போதின்
றரையின தகத்து நான்கு சதுமுசப் பூத மாமே.
(இ-ள்.)
உரைசெய்த - இப்போது சொல்லப்பட்ட, பீடத்து -
பிரதமபீடமாகிய சக்கர பீடத்தினுடைய, உம்பர் - மேலே,
வலங்கொள்
மண்டலம் - (பவ்விய ஜீவன்கள் ஏறி) பிரதக்ஷிணம்
வரும்படியான
இடமானது, ஓர் கோசத்து - ஓர் குரோசம் அகலமாகி யிராநின்றது,
அரைநல்ல வரண்டகத்த - இன்னும் அப்பீடத்தில்
நன்மையாகிப்
பேர்பாதியாகிய வரண்டகக்
கொடிகளினிடமானது,
தனதகத்தளவதேயாய் - அந்த இடத்திற்குத்
தக்க லக்ஷணமான
உத்ஸேத பிரமாணங்களை யுடையதாகியும்,
(அதுவல்லாமலும்
அப்பீடத்தில்), மேலாமுகத்தவாய்
- ஆகாசமுகத்தினின்றும்
தேவர்களால் சொரியப்பட்ட, விரை - வாசனை பொருந்திய,
மலர்மாரி
- புஷ்பவருஷங்களினால், விழுந்த - விழுந்து கிடக்கின்ற, போதின் -
புஷ்பங்களால் நிறைந்த, தரையின
தகத்து - அப்பீடபூமியின்
மத்தியில், சதுமுகப்பூதம் - சதுர்முகத்தையுடைய பூதங்கள், நான்கு -
நான்கு மஹாவீதிகளின் நேராக வீதிக்கொன்றாக
நாலு சதுர்முக
பூதங்கள், ஆம் - ஆகும், எ-று. (123)
1171. சக்கரன் சாபம் போலத் தனுவில்லை யுமிழச் சென்னி
மிக்கமா மணிசெ யாரம் விளங்குமா யிரத்த தாகித்
திக்குலாம் பொழுது காத நான்கதாய்ச் செறிந்தி ருந்தால்
விற்கண்மூன் றாய றப்பே ராழிதான் விளங்கு நின்றே.
(இ-ள்.) வானவர்கோன் -
சக்கரன் - தேவேந்திரனுடைய,
சாபம்போல - வில்லாகிய இந்திரதனுஸுவைப் போல, தனு - அந்தச்
சதுர்முகப் பூதத்தினுடைய சரீரமானது, வில்லை - கிரணத்தை,
உமிழ
- சொரிய, சென்னி - சிரசில், மிக்க - மிகுதியாகிய,
மா - பெருமை
பொருந்திய, மணி - இரத்தினங்களால், செய் - செய்யப்பட்ட,
ஆரம்
- ஹாரங்களானவை, ஆயிரத்ததாகி - ஆயிரங்களை யுடையதாகி,
விளங்கும் - பிரகாசிக்கப்பெற்றதாகும்,
திக்குலாம்பொழுது -
ஸ்ரீவிஹாரமாகின்றபோது, காதநான்கதாய்
- நாலு காதமாகி,
செறிந்திருந்தால் - ஸமவஸரணத்தை
யடைந்திருந்தால், விற்கண்
மூன்றாய் - மூன்று வில் பிரமாணமாகி, அறப்பேராழிதான்
- தர்ம
சக்கரமானது, நின்று - தரிக்கப்பெற்றதாகி
நின்று, விளங்கும் -
பிரகாசிக்கும், எ-று. (124) 1172. முன்னைப்பீ டத்தின் பாதங் குறைந்தகன் றுயர்ந்த வாறே
யன்னமு மயிலு மில்லா வக்கொடி
பீடந் தன்மேற்
சொன்னவா றுயர்ந்திட் டைந்து
கோசமாந் தலத்தின்மீது
மன்னிய கந்தகுடியின் மண்டபங்
காத மாமே.
|