பிரமாண வகலத்தை
யுடையதாகி, அம் - அழகிய, முழுமணி -
முதிர்ச்சிபெற்ற இரத்தினத்தினாலாகிய, பீடம் - பீடத்தை,
ஏந்தப்பட்ட
- தரிக்கப்பட்ட, சீயம் - சிம்மங்கள்,
ஏன்று - பொருந்தி,
மேலெழுவபோல - மேலெழும்பிச் செல்வனபோல,
இருந்தன -
இராநின்றன, (அந்த ஸிம்ம பீடத்தின்மேலே), ஆன்ற - பெரிதாகிய,
பொன்னணையும் - பொன்னாலாகிய மெத்தையும், அம் - அழகிய,
பொன் - பொன்னாலாகிய, விசியும் - கட்டும், (அதாவது : திண்டும்),
நுண் - மெல்லிதாகிய, துகிலும் - பட்டு
வஸ்திரமும், மேவி -
பொருந்தி, தோன்றும் -
தோன்றுகின்ற, சுடருமிழ்ந்து -
பிரகாசத்தைவீசி, (ஜினேந்திரனாகிய பகவான் அமர்ந்திருக்க)
இரவி
போன்ற - சூர்யப்பிரகாசத்தை நிகர்த்துப் பிரகாசித்தன, எ-று. (127)
1175. வில்லரை யகன்று யர்ந்த விழுமணிப் பீட மேய
வெல்லைநின் றிரும ருங்கு மியக்கர்சா மரையி யக்க
நல்லெழிற் பீட மேவி நாகவிந் திரரு நானா
வில்லுமிழ்ந் திலங்குந் தோண்மேல் விளங்குசா மரைய ரானார்.
(இ-ள்.)
வில்லரையகன்றுயர்ந்த -
அரைவில்லகன்று
அரைவில்லுயர்ந் திராநின்ற, விழுமணிப்பீடம் - பெருமை
பொருந்திய
ரத்தினத்தாலாகிய பீடங்களானவை, மேய
- (நாலு திசையிலும்
பகவானுடைய பீடத்தின் இரண்டு பக்கங்களிலும்)
பொருந்தியிரா
நின்றன, எல்லை நின்று - (அந்தப் பீடத்துக்கு இப்பால்)
மெட்டாக
நின்று, இருமருங்கும் - இரண்டு பக்கங்களிலும்,
இயக்கர் -
யக்ஷதேவர்கள், சாமரை - வெண்சாமரைகளை, இயக்க - வீச, நல் -
நன்மையாகிய, எழில் - அழகையுடைய, பீடம் - இப்போது சொன்ன
பீடங்களில், மேவி -
பொருந்தி, நாகவிந்திரரும் -
பவணேந்திரர்களும், நானாவில்லுமிழ்ந்து
- பல விதமான
கிரணங்களைச் சொரிந்து,
இலங்கும் -
விளங்குகின்ற,
(ஆபரணங்களை யணிந்த), தோள்மேல் - தங்கள் தோள்களின்மேல்,
(வைத்து வீசாநின்ற), விளங்கும்
- பிரகாசம் பொருந்திய,
சாமரையரானார் - வெண் சாமரைகளை
யுடையவர்களானார்கள்,
எ-று. (128) 1176.
தாமரைத் தடத்தெ ழுந்து பொன்மலை தன்னைச் சூழ்ந்த
காமரு கன்னி யன்னக் குழாத்தினின் னான்கி
லாத
சாமரைத் தொகுதி நான்கு பத்துநூ றாயி
ரந்தான்
சோமரை வென்ற மூன்று குடையினான் புடைய வாமே.
(இ-ள்.) தாமரைத்தடத்து
- தாமரைத் தடாகத்தினின்றும்,
எழுந்து - எழும்பி, பொன்மலைதன்னை - மஹம்மேரு பர்வதத்தை,
சூழ்ந்த - சூழ்ந்துகொண்ட - காமரு - வாஞ்சிக்கும்படியான, கன்னி -
இளமையாகிய, அன்னக்
குழாத்தினின் -
ஹம்ஸ
கூட்டங்களைப்போல, (வெளுப்பாகிய), சாமரைத்தொகுதி -
சாமரைக்
கூட்
|