வணங்கி, பின் -
பிற்பாடு, தனை - அப்பிரபா மண்டலத்தை,
கண்டவர் - பார்க்கின்றவர்களுடைய, பிறவியேழ் - சப்தபவஜாதியை,
காண - பார்க்கும் படியாக, நின்றது - இராநின்றது, எ-று. (136)
1184. அந்தமி லுவகைய ரான வானவர்
துந்துபி முழக்கொலி தொடர்ந்த
றாதெழ
வந்துடன் வீழ்ந்தவா னவர்பெய் பூமழை
பந்தியும் பரவையும் பிறவு மாகவே.
(இ-ள்.)
அந்தமில் - அளவில்லாத,
உவகையரான -
சந்தோஷத்தை யுடையவர்களான, வானவர்
- தேவர்களுடைய,
துந்துபி - வாத்தியங்களின், முழக்கு
- கர்ஜனையின், ஒலி -
சப்தமானது, தொடர்ந்து - சேர்ந்து,
அறாது - பற்றறாமல், எழ -
வியாபிக்க, வானவர் - மற்றும்
தேவர்கள், பெய் - சொரிகின்ற,
பூமழை - புஷ்ப வருஷங்கள், பந்தியும்
- வரிசைகளாகவும்,
பரவையும் - விசாலமாகவும், பிறவும்
ஆக - இன்னும் அனேக
விசித்திரங்களாகவும் ஆக, வந்து - வந்து, உடன் - உடனுக்குடன்,
வீழ்ந்த - வீழ்ந்தன, எ-று. (137) வேறு.
1185. மாதவர் துறக்க மாதர் மாதவம் புரியு மாதர்
சோதிடர் வான வந்தரர் பவணர்தந்
தோகை யன்னார்
மேதகு பவணர் வான வந்தரர்
விளங்குந் தேவர்
சோதம னாதி வானோர் மன்னர்சொல் லறிவி லங்காம்.
(இ-ள்.) மாதவர் - கணதராதி மஹாமுனிவரர்களும்,
துறக்கமாதர்
- கல்பவாஸி தேவஸ்த்ரீயர்களும்,
மாதவம்புரியும் மாதர் -
தபஞ்செய்து நோற்கின்ற ஆர்யாங்கனைகளும், சோதிடர்வான
வந்தரர்
பவணர் தம் தோகையன்னார் - ஜோதிஷ்க தேவஸ்த்ரீகளும்
வியந்தர
தேவஸ்த்ரீகளும்
பவணதேவஸ்த்ரீகளும்,
மேதகு -
மேன்மையிற்றகுந்த, பவணர் - பவணதேவர்களும், வானவந்தரர் -
வியந்தரதேவர்களும், விளங்குந்தேவர் -
ஜோதிஷ்கதேவர்களும்,
சோதமனாதிவானோர் - ஸௌதர்மாதிகல்பவாஸி
தேவர்களும்,
மன்னர் - அரசராதியரும், சொல்லறிவிலங்கு - தர்மவசனத்தையறியும்
சக்தியுள்ள (அதாவது : மனோபலமுள்ள) திரியக்ஜீவன்களும், ஆம் -
இப்படி வரிசையாக த்வாதசகணங்கள் கோஷ்டபூமியிலாகும், எ-று. (138) 1186. பன்னிரு கணமுஞ் சூழப் பருதியி
னடுவணுச்சி
மன்னிய வருக்க னொத்தும் மந்தர முலக மூன்றின்
|